K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

இஸ்ரேல் – ஈரான் போர்... எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு

இந்தியர்கள் அவசியமின்றி ஈரானுக்கு செல்ல வேண்டாம் என்றும் ஈரானில் உள்ள இந்தியர்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் சமூகநீதி நடைமுறையில் இல்லை – ஆளுநர் ஆர்.என். ரவி

தமிழ்நாட்டில் சமூகநீதி பேசப்படுகிறதே தவிர, அது நடைமுறையில் இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தொடர்ந்து தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களால் வெட்கமும், வேதனையும் படுகிறேன் என தெரிவித்தார். 

ஒரே நேரத்தில் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அதிமுக - அமமுகவினர்.. முற்றிய வாக்குவாதம்

சென்னை அடையாறு காந்தி மண்டபத்தில் அதிமுக மற்றும் அமமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காந்தி சிலைக்கு யார் முதலில் மாலை அணிவிப்பது என்பதில் போட்டி ஏற்பட்ட நிலையில் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

விசாரணை கைதி மரணம் - காவல்துறை விளக்கம்

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் குறித்து திருச்சி மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

விண்ணை பிளந்த சத்தம்.. அதிர்ந்த மெரினா.. வான் சாகச ஒத்திகை நிகழ்ச்சி

இந்திய விமானப்படையின் 92வது நிறுவன தினத்தையொட்டி சென்னை மெரினாவில் வரும் 6ம் தேதி பிரமாண்ட வான் சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான 2ம் நாள் ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

அரசின் உத்தரவுக்கு அதிரடியாக தடை விதித்த உயர்நீதிமன்றம்

கூட்டுறவு வீட்டு வசதி சங்க வீட்டு மனைகளுக்கு ஒப்புதல் தந்ததில் எழுந்த முறைகேடு புகார் தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது

இணையத்தில் பரவும் போலி தகவல்.. சிவகார்த்திகேயன் எச்சரிக்கை

சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எந்த திரைப்படங்களுக்கும் காஸ்டிங் ஏஜெண்டுகள் நியமிக்கப்படவில்லை. தயாரிப்பு நிறுவனத்திற்கு மாறாக வரும் மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைத்தள பதிவுகளை நம்ப வேண்டாம் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

தவெக மாநாட்டின் பூமி பூஜை..எந்த தேதியில் தெரியுமா?

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் 27ம் தேதி முதல் மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி வரும் 4ம் தேதி பூமி பூஜை நடைபெறும் என தவெக அறிவித்துள்ளது

மகாத்மா காந்தியை புறக்கணித்தாரா திருமாவளவன்?

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அடையாறில் உள்ள காந்தி மண்டபத்திற்கு வருகை தந்த விசிக தலைவர் திருமாவளவன் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தவில்லை. இதனால் மகாத்மா காந்தியை திருமாவளவன் புறக்கணித்தார் என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது.

பிரேக் பிடிக்காததால் நடந்த அசம்பாவிதம்... அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி கோர விபத்து

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தட்டான்குட்டையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் இரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி சீர்செய்தனர்