#Breaking || 3-ம் உலகப்போர் மூளும் அபாயம்?
இஸ்ரேல் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியதன் எதிரொலி - 3-ம் உலகப்போர் மூளும் அபாயம்? ஈரான், லெபனான் எல்லைகளில் தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்
இஸ்ரேல் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியதன் எதிரொலி - 3-ம் உலகப்போர் மூளும் அபாயம்? ஈரான், லெபனான் எல்லைகளில் தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்
ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள வேட்டையன் படத்தின் டிரெய்லர் வெளியானது. ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் வரும் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது
நிரந்தர இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்களை நியமிக்க முடியவில்லை என்றால் அரசு சட்டக் கல்லூரிகளை மூடிவிடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் காட்டம். அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள இணைப் பேராசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப கோரி வசந்தகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கு
தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 2,950 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு. 89 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 2,950 கிலோ கஞ்சாவை செங்கல்பட்டு பகுதியில் போலீசார் தீயிட்டு அழித்தனர்
விருத்தாச்சலத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊர்வலமாக செல்ல முயன்ற காங். MLA ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு. ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை என்று கூறி தடுத்து நிறுத்தியதால் காவல்துறைக்கும், MLA ராதாகிருஷ்ணனுக்கும் வாக்குவாதம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு அக்கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் தொடங்கியது
சென்னை சென்னகேசவ பெருமாள் கோயிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்கியது. 250 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் இருந்து திருமலைக்கு திருக்குடை ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது
பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் ஆற்றில் அவசரமாக நிவாரண பொருட்களை எடுத்து சென்ற ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. ஹெலிகாப்டரின் என்ஜின் செயலிழந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
விருதுநகர் அருப்புக்கோட்டை அருகே தனது ஆட்டோவில் பயணித்த பெண்ணை கத்தியால் குத்திவிட்டு 4.5 சவரன் நகையை பறித்து சென்ற ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள உள்ள ராமநாதன் என்பவரை தேடி வருகின்றனர்,
டெல்லியில் இதுவரை இல்லாத அளவு 560 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.