K U M U D A M   N E W S
Kumudam Ad

தமிழ்நாடு

சிந்தாதிரிப்பேட்டையில் நவீன மீன் அங்காடி வேண்டாம்... உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்...!

கூவம் நதியில் மீன் கழிவுகள் கொட்டப்பட   வாய்ப்புள்ளதால், முறையான திடக்கழிவு மேலாண்மை வசதியை ஏற்படுத்தாமல், சிந்தாதிரிப்பேட்டையில் அமைக்கப்படும் நவீன மீன் அங்காடியை துவங்க கூடாது என உத்தரவிடக்கோரி சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டி... ஏற்பாடுகள் தீவிரம்..!

பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் தமிழர்களின் அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. தொடர்ந்து, சுற்றுலா துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை எதிரொலி... காய்கறிகள், பழங்கள், பூக்கள் விலை கடுமையாக உயர்வு..!

தஞ்சை உழவர் சந்தை காய்கறி மார்க்கெட்டில் பொங்கல் பண்டிகைக்கான  காய்கறிகள், பழங்கள், பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து இருந்தும்  அதனை பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

போகி பண்டிகை.. புகை மண்டலமான சென்னை..!

சென்னையில் போகி பண்டிகையை கொண்ட பழையன கழிதல் என்ற முறையில் மக்கள் பழைய பொருட்களை தீயிட்டு எரித்ததால் சென்னையில் மாசு அதிகரித்து புகை மண்டகமாக காட்சி அளிக்கிறது.

போகிப்பண்டிகை கொண்டாட்டம்... பனிமூட்டத்துடன் புகை சூழ்ந்ததால் விமான சேவை பாதிப்பு

சென்னை விமான நிலையம் ஓடுபாதை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பனிமூட்டத்துடன் புகை சூழ்ந்ததால் விமான சேவை பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொங்கல் விற்பனையால் கலை கட்டிய தியாகராய நகர்.. காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்க சென்னை ரங்கநாதன் தெருவில் பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர்.  மெட்ரோ பணிகள் மற்றும் மேம்பாலப் பணிகள் காரணமாக கடந்த ஆண்டை காட்டிலும் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. 

எடப்பாடி பழனிசாமி உறவினரின் வீட்டில் வருமான வரி சோதனை... முக்கிய ஆவணங்கள் ஆதாரங்கள் பறிமுதல்..!

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் தொடர்பான இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில் 10 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவை தவிர்த்து விட்டு உலக நாடுகள் எந்த முடிவையும் எடுக்க முடியாது- ஆளுநர் ஆர்.என்.ரவி

உலகில் இந்தியாவை தவிர்த்து விட்டு உலக நாடுகள் எந்த முடிவையும் எடுக்க முடியாது.  இந்தியா முழுவதும் விவேகானந்தரின் அருளும் ஆசீர்வாதமும் நிறைந்துள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா..? புறக்கணிப்பா..? பாஜக ஆலோசனை

சென்னையில் நடைபெறும் பாஜக ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறதா என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

யுஜிசி விதிகள் மாநில அரசுக்கு எதிராக உள்ளது - விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

"ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது, இது அவர்களுக்கான பலவீனத்தை காட்டுகிறது, இந்த நிலைப்பாடு அதிமுக சரிவுக்கான புள்ளியாக அமையும் என்று திருமா கருத்து தெரிவித்துள்ளார்.