K U M U D A M   N E W S
Kumudam Ad

தமிழ்நாடு

டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலம் ரத்து.. பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்..!

மதுரை மாவட்டம், அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கான ஏலத்தை ரத்து செய்தது மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனைதொடர்ந்து அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த வழக்கு... தூக்கு தண்டனை கைதி விளக்கமளிக்க உத்தரவு..!

கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த வழக்கில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்யக் கோரிய விசாரணையில், தனக்கு வழக்கறிஞர் நியமித்துக் கொள்கிறாரா என விளக்கமளிக்க, குற்றவாளி சதீஷை ஜனவரி 29ம் தேதி காணொலியில் ஆஜர்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெலிவரி ஆட்களை கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரிய வழக்கு.. உயர்நீதிமன்றம் உத்தரவு

உணவு மற்றும் மளிகை பொருட்களை வீடுகளுக்கு விநியோகம் செய்யும் நிறுவனங்களின் டெலிவரி ஆட்களை கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரிய வழக்கில், தமிழக டிஜிபி மற்றும் டெலிவரி நிறுவனங்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது- ஸ்டாலின் பெருமிதம்

தொல்லியல் துறை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியதாக பெருமிதம் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. போலீஸ் காவலை தவிர்க்க நாடகமாடிய ஞானசேகரன்?

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஞானசேகரன் வலிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை முடிந்து சீரான போதும் போலீஸ் கஸ்டடியை தவிர்க்க நடித்ததாக கூறப்படுகிறது. 

வலிப்பால் உடல்நலக் குறைவு.. சிகிச்சை முடிந்து ஞானசேகரனிடம் மீண்டும் விசாரணை

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரிடம் மீண்டும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவு.. வெளியேற சொன்னால் தற்கொலை செய்து கொள்வோம்.. பொதுமக்கள் கவலை

அரும்பாக்கம் பகுதியில் வசித்து வரும் மக்களை வெளியேற கூறி நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் தங்களை காலி செய்ய சொன்னால் தற்கொலை செய்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என  மூதாட்டி ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்தார். 

பத்து மணிநேரம் நடைபெற்ற விசாரணை.. அமலாக்கத்துறை அழைத்தாள் ஆஜராக தயார்- கதிர் ஆனந்த்

எம்.பி. கதிர் ஆனந்திடம் அமலாக்கத்துறையினர் 10 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடத்திய நிலையில் அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்தால் வருவேன் என கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. எச்சரிக்கை... தேவையான தகவல் அளிக்காவிட்டால் அங்கீகாரம் ரத்து..!

பொறியியல் கல்லூரிகள் தேவையான தகவல்களை அளிக்காவிட்டால் அதன் அங்கீகாரம் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி, சஸ்பெண்ட் செய்யப்படும் அல்லது  திரும்பப் பெறப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 6-வது அல்லது 7-வது சம்பள கமிஷன் நிர்ணயம் செய்த ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும்  அண்ணா பல்கலைக் கழகம்  அறிவித்துள்ளது. 

திருச்செந்தூரில் தொடர் கடல் அரிப்பு... காரணம் என்ன? களத்தில் இறங்கிய ஆராய்ச்சி குழு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் தொடர் கடல் அரிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆராய்ச்சி குழுவினர் ஆய்வு செய்தனர்.