K U M U D A M   N E W S
Kumudam Ad

தமிழ்நாடு

ஆமைகள் இனப்பெருக்க காலம்... விசைப்படகுகளை இயக்க தடை விதிக்க தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..!

தமிழகத்தில் ஆமைகள் இனப்பெருக்க காலத்தில் அதிவேக விசைப்படகுகளை குறிப்பிட்ட பகுதியில் இயக்க தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

பறிமுதல் செய்த 10 தங்க வளையல்களை திருப்பி ஒப்படைக்க வேண்டும் - சுங்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு..!

இந்தியாவில் திருமண நிகழ்வின் போது பத்து தங்க வளையல்கள் அணிவது வழக்கம் என தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 135 கிராம் எடையுள்ள 10 தங்க வளையல்களை திருப்பி ஒப்படைக்க சுங்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

வயதான தம்பதிகளிடம் 10 லட்ச ரூபாய் எடுத்து மோசடி.. கல்லூரி மாணவி கைவரிசை..!

வயதான தம்பதியினரை கவனிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட கல்லூரி மாணவி, அவர்களிடம் இருந்து 10 லட்ச ரூபாயை எடுத்து மோசடி செய்துள்ளது அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சிறுவனுக்கு பாலியல் தொல்லை செல்போனில் இருந்த ரகசியம்? துணை நடிகர் போக்சோவில் கைது!

பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனுக்கு துணை நடிகர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போனில் இருந்த புகைப்படங்களை காட்டி, சிறுவர்களிடம் சில்மிஷம் செய்த துணை நடிகர் யார்..? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்

ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. கீழே தள்ளிவிட்டதால் பரபரப்பு

ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு கீழே தள்ளிவிட்ட நபரை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட பணம்.. இளைஞர்கள் இருவரிடம் விசாரணை

உரிய ஆவணமின்றி 75 லட்சம் ரூபாயை ஆந்திராவில் இருந்து காரில் கொண்டு வந்த இளைஞர்கள் இருவரிடம் வருமான வரித்துறை அதிகாரி விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் நிலவும் கடும் பனிமூட்டம்.. சிரமத்திற்குள்ளான பொதுமக்கள்

தமிழகத்தில் நிலவும் அதிகப்படியான பனிமூட்டம் காரணமாக பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மேலும், விமானங்கள் வருகைப்பாடு, புறப்பாடு தாமதமாகியுள்ளது.

முகத்தில் கொப்பளங்களுடன் வந்த பயணி.. குரங்கு அம்மை என்ற சந்தேகத்தால் பரபரப்பு

இலங்கையிலிருந்து வந்த திரிபுரா மாநில பயணி ஒருவருக்கு முகத்தில் கொப்பளங்கள் இருந்த நிலையில் குரங்கு அம்மனாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அடிப்படையில் அதிகாரிகள் அவரை தனி ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பியதால்  விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டவிரோதமாக வீட்டை இடித்த வழக்கு: நடிகை கவுதமிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சட்டவிரோதமாக தனது வீட்டை இடித்ததற்காக இரண்டு கோடி ரூபாய் இழப்பீடுக்கோரி வழக்கு தொடர அனுமதிக்கோரி நாச்சாள் என்பவர் தாக்கல் செய்த மனு குறித்து அதிமுக நிர்வாகியும் நடிகையுமான கவுதமி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நம்மால் காவல்துறை இழுக்கு ஏற்படக்கூடாது எண்ணத்தோடு பணியாற்ற வேண்டும் - சென்னை காவல் ஆணையர் அருண் வேண்டுகோள்

சென்னையில் நடைபெற்ற காவலர்களின் நற்பணிக்காக முதலமைச்சர் காவலர் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியில் நம்மால் காவல்துறை இழுக்கு ஏற்படக்கூடாது எண்ணத்தோடு பணியாற்ற வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அருண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.