K U M U D A M   N E W S
Kumudam Ad

தமிழ்நாடு

திருப்பதி - பழனி மீண்டும் பேருந்து சேவை இயக்க நடவடிக்கை- பவன் கல்யாண் தகவல்

திருப்பதியில் இருந்து பழனிக்கு மீண்டும் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழகம் போல் திருப்பதி உள்ளிட்ட கோயில்களில் பக்தர்களின் தரிசனம் எளிமையாக்கப்படும்  என்றும்  ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

காதலர் தின ஆஃபருக்கு எதிர்ப்பு.. தாலிக் கயிறுடன் வந்த இந்து முன்னணி நிர்வாகிகள் கைது

காரைக்குடியில் காதலர் தின ஆஃபருக்கு எதிர்ப்பு தெரிவித்து தாலி கயிறுடன் வந்த இந்து முன்னணி நிர்வாகிகள் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்த நிலையில் நான்கு பேரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அமோகமாக நடந்த சாராய விற்பனை.. தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை

மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையை தட்டிக் கேட்ட கல்லூரி மாணவன் மற்றும் இளைஞர் ஆகிய இருவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

திமுக அரசுக்கு எதிராக ஜாக்டோ ஜியோ கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து திமுக அரசுக்கு எதிராக ஜாக்டோ ஜியோ சார்பில் கரூரில் 100-க்கும் மேற்பட்டோர் மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சாதி வளர்ச்சிக்கு எதிரானது - உயர்நீதிமன்றம்

சமூகத்தை பிளவுபடுத்தி, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி, கலவரங்களை தூண்டும் சாதி, வளர்ச்சிக்கு எதிரானது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நான் பார்த்துக்கிறேன்.. செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அசராமல் பதிலளித்த பவன்கல்யாண்

பழநியிலிருந்து திருப்பதிக்கு தினமும் பேருந்து இயக்க ஆந்திரா போக்குவரத்துக்கழகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல், பழநியிலிருந்து திருப்பதிக்கு ரயில் சேவை தொடங்க மத்திய அரசிடம் வலியுறுத்துவேன் என நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் தெரிவித்தார்.

”நீயெல்லாம் புல்லட் ஓட்டுவியா” சாதி வெறியில் அரிவாள் வெட்டு கல்லூரி மாணவன் கவலைக்கிடம்!

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவனின் கைகளை, புல்லட் ஓட்டியதற்காக அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படங்களில் வரும் சம்பவம் போல, மானாமதுரையில் நடந்துள்ள கொடூரம் குறித்து, இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

மானத்தை வாங்கிய கணவன்... மனதை பறித்த கடன்காரன்... பீஹாரில் ஒரு புதுமைப்பெண்!

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்துகொண்டே இருந்தாலும், ஆங்காங்கே புதுமைப் பெண்கள் செய்யும் புரட்சிகள் பலரையும் திரும்பி பார்க்க வைக்கின்றன. அப்படியொரு சம்பவம் பீஹாரில் நடந்துள்ளது, அதுகுறித்து இப்போது பார்க்கலாம்....

இது காவல்துறைக்கே களங்கம்... பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை? ஆதாரங்களுடன் சிக்கிய ஐபிஎஸ் ஆபிஸர்!

சென்னை போக்குவரத்து காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையர் மகேஷ் குமார், பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்: ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக குற்றவாளி ஞானசேகரனுக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.