K U M U D A M   N E W S
Kumudam Ad

தமிழ்நாடு

கனிமவள முறைகேடு: தமிழகத்தில் 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!

கனிமவள முறைகேடு தொடர்பாக தமிழகத்தில் 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலையில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். ரூ. 5832 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

“கூடா நட்பு கேடாய் முடியும்” –விருதுநகரில் பாஜக போஸ்டரால் பரபரப்பு

கூடா நட்பு கேடாய் முடியும்.. வேண்டும் மீண்டும் அண்ணாமலை.. என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டரை பாஜக நிர்வாகி ஒட்டியுள்ளதால் விருதுநகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு...9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசு தரப்பு சாட்சி விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்...குவிந்த பக்தர்கள்

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல்நாளிலேயே ஏராளமான பக்தர்கள் கங்கை மற்றும் காவிரியில் இருந்து புனித தீர்த்தங்கள் கொண்டுவந்து மூலவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

பிரதமர் மோடி பாம்பன் வருகை... ராமேஸ்வரத்தில் பலத்த பாதுகாப்பு

பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரம் வருகை தர உள்ளார்.

புதுக்கோட்டையில் இளைஞர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை-டாஸ்மாக்கை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு

கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, டாஸ்மாக் கடையையும் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு

அம்மன் சிலையில் பால் வடிந்ததால் பரபரப்பு...தீயாய் பரவிய தகவலால் குவிந்த பக்தர்கள்

கோவிலில் ஏராளமான பெண்கள் பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டுச் சென்றனர்

சென்னையில் பெண்ணிடம் அத்துமீறல்...குழந்தையை கடத்த முயன்றவரை விரட்டி பிடித்த வீடியோ வைரல்

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் குழந்தையை கடத்த முயன்ற திருடனை பொதுமக்கள் விரட்டிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வனப்பகுதியில் அன்னிய மரங்களை அகற்ற நவீன இயந்திரங்கள் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

தமிழக வனப்பகுதிகளில் அன்னிய மரங்களை அகற்ற நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதற்கு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

கார் பார்கிங் விவகாரம்.. தர்ஷன் மற்றும் லோகேஷ் இருவருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

கார் பார்க்கிங் விவகாரத்தில், நீதிபதியின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் தர்ஷன் மற்றும் அவரது உறவினர் லோகேஷ் ஆகிய 2 பேருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.