K U M U D A M   N E W S

12 மாவட்டங்களில் டேஞ்சர்..! - ருத்ரதாண்டவம் ஆடப்போகும் கனமழை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கோரமுகத்தை காட்டும் கடல்.. கதி கலங்கிய குமரி மக்கள்.. - வரப்போகிறதா ஆபத்து..?

கன்னியாகுமரி மாவட்டம் அழிக்கால், பிள்ளைத்தோப்பு ஆகிய பகுதிகள் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டன. அந்த பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 

3 நாட்கள் ஆச்சு.. இபிஎஸ் கால்கள் தரையை தொட்டுள்ளதா? - அமைச்சர் சேகர்பாபு கேள்வி

மழை ஆரம்பித்து 3 நாட்கள் ஆகியுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கால்கள் எங்கேயாவது தரையில் பட்டுள்ளதா? என்று அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பதி செல்வோர் கவனத்திற்கு..! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

திருப்பதியில் தொடர் மழை காரணமாக மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அதை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது, இந்நிலையில், மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.  

இன்னைக்கு மழை இல்லை.... இல்லனா திமுகவின் சாயம் வெளுத்துருக்கும்.. ஜெயக்குமார் பகீர் குற்றச்சாட்டு!

“ஆளுநரும் திமுகவும் ஒன்றாகி விட்டனர். தமிழக ஆளுநருடன் அனுசரித்து போகின்றோம் என பிரதமருடன் திமுக ஒப்பந்தம் போட்டுள்ளது” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

தீவாக மாறிய திருவொற்றியூர் - கடும் அவலம் - அதிர்ச்சி காட்சி

சென்னை திருவொற்றியூர் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். மழைநீரை அகற்ற அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Anirudh Networth 2024: 2கே கிட்ஸ்களின் ராக்ஸ்டார்... அனிருத் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?

கோலிவுட் ரசிகர்களால் ராக்ஸ்டார் என கொண்டாடப்படும் அனிருத், இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு ரசிகர்களும் திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அனிருத்தின் சம்பளம், சொத்து மதிப்பு பற்றி தற்போது பார்க்கலாம்.

வாகன ஓட்டிகளே ரிஸ்க் வேண்டாம்.. தத்தளிக்கும் மாதவரம்..!

சென்னை மாதவரம் வடதிருப்பாக்கம், வடகரை ஆகிய முக்கிய சாலைகளில் வெள்ளம் போல் சூழ்ந்துள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்.. சென்னையின் முக்கிய சாலையில் இப்படியா..?

சென்னையில் பெய்து வந்த கனமழை ஓய்ந்தும் வெள்ள நீர் வடியாததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். அத்தியாவசிய தேவைக்கு கூட வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளதால் அரசு உடனடியாக இதை சீர் செய்து தர வேண்டும் என கோரிகை விடுத்துள்ளனர். 

வயநாட்டில் போல சென்னையிலும்.. ட்ரோன்களை பறக்கவிட்டு பைலட்டுகள் ஒத்திகை

வயநாடு நிலச்சரிவின் போது ட்ரோன் மூலம் உணவு, மருந்து வழங்கியது போல, சென்னையிலும் வழங்க மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ள நிலையில், ட்ரோன் பறக்க விட்டு பைலட்கள் ஒத்திகை பார்த்தனர்.