K U M U D A M   N E W S

தமிழ்நாட்டில் இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! மீனவர்களுக்கு எச்சரிக்கை

வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் இன்று (அக். 17) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல்.. விசாரணையில் வெளிவந்த உண்மை

சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள மசூதிக்கு அனுஷா தயாநிதி என்ற பெயரில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இதைத்தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையில் அது புரளி என தெரிய வந்தது. 

களத்தில் முதலமைச்சர்.. சொந்த தொகுதியில் அதிரடி ஆய்வு

சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். 

கவரைப்பேட்டை ரயில் விபத்து... 25 பேருக்கு பறந்த சம்மன்

கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து தொடர்பாக 25 பேருக்கு வழங்கப்பட்ட சம்மன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Actor Karthik: நவரச நாயகனுக்கு திடீர்ன்னு என்னாச்சு..? கார்த்திக் லேட்டஸ்ட் ஹெல்த் அப்டேட்!

நவரச நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் கார்த்திக், மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், கார்த்திக்கின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினர் அப்டேட் கொடுத்துள்ளனர்.

தொழிற்சாலையை நவீனமயமாக்கும் ஹூண்டாய் நிறுவனம்

 காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் ஹுண்டாய் நிறுவனத்தின் கார் தொழிற்சாலை 5.40 லட்சம் சதுர அடியில் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையை கூடுதலாக 1.81 லட்சம் சதுர அடியில் நவீனமயமாக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சென்னையில் மீண்டும் பரபரப்பு... அதிரடி சோதனையில் குதித்த வருமான வரித்துறையினர்!

பூர்விகா மொபைல் நிறுவன உரிமையாளர் யுவராஜ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (அக். 17) திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

புரட்டாசி பெளர்ணமி.. தி.மலையில் அலைமோதும் கூட்டம்

புரட்டாசி மாத பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். ராஜகோபுரம் நுழைவு வாயில் வழியாக வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

காவு வாங்கிய கள்ளச்சாராயம்... தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை

பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து மாகர் மற்றும் அவுரியா ஊராட்சிகளின் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் 

நிறுத்தப்பட்ட இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட் போட்டி.. காரணம் என்ன?

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வந்த இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.