கேரளாவை அலறவிடும் நிபா.. பறிபோன உயிர்..
கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து தமிழக-கேரள எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து தமிழக-கேரள எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,600-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.96க்கு விற்பனை செய்யப்படுகிறது
மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய ரூ.6செ லட்சம் வரியை செலுத்தாதல் சென்னை நங்கநல்லூர் பகுதியில் இயங்கி வரும் வெற்றிவேல் திரையரங்கிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்
13 லட்ச ரூபாய் கடனுக்காக, ஹவாலா பணம் எடுத்து வருபவரை நோட்டமிட்டு நண்பனோடு சேர்ந்து வழிப்பறியில் ஈடுப்பட்ட முதல்நிலை காவலரையும், அதிமுக நிர்வாகியின் மகனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை துரைப்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பத்தில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டிக் கொலை. கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை சூட்கேஸில் அடைத்து வீசிய நபர் குறித்து போலீசார் விசாரணை
ஒரே நாடு ஒரே தேர்தல் - காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சாடல். வேலை இல்லா திண்டாட்டத்தை மறைக்க முயற்சி என அஜய்குமார்
தஞ்சாவூர் பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் மதமாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடக்கவில்லை என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப்-4 தேர்வு மூலம் 20,000 இடங்கள் நிரப்ப வேண்டிய சூழலில், நடப்பாண்டில் வெறும் 6,244 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளது . குரூப்-4 தேர்வைக் கனவாகக் கொண்ட லட்சக்கணக்கான இளைஞர்களை வஞ்சிக்கும் திமுக அரசுக்கு கண்டனம் - அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்
கோவில் பூசாரியுடன் ஜி.பி.முத்து மிகவும் தரக்குறைவாக வீதியில் நின்று சண்டை போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நெய்வேலி என்.எல்.சி-யில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் 20% போனஸ் வழங்கக் கோரி 2வது நாளாக போராட்டம். என்எல்சி நிறுவனம் முன்பு அமர்ந்து விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தொழிலாளர்கள். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு என்எல்சி நிர்வாகம் 8.33% மட்டுமே போனஸ் வழங்குகிறது
மது ஒழிப்பு மாநாட்டை திமுகவை அழைத்து நடத்துவது வேடிக்கையான ஒன்று என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பது கண்டிக்கத்தக்கது என தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.சென்னையை அடுத்த அம்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.
என்கவுன்டர் செய்யப்பட்ட காக்கா தோப்பு பாலாஜி உடன் சென்ற சத்தியமூர்த்தி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது கஞ்சா கடத்திய வழக்கில் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளது.
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பது குடும்ப அரசியலின் உச்சம் என அதிமுகவை சேர்ந்த வைகைச் செல்வன் விமர்சனம்
இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இன்று முதல் வரும் 23 ஆம் தேதி வரை தினசரி டிக்கெட் விற்பனை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறும்
இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், மழைபொழிவால் ஆட்டம் தடைபட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
சென்னை அடுத்த பூந்தமல்லி கிளைச் சிறையில் எறும்பு மருந்து குடித்து ஷாகிர் என்ற கைதி தற்கொலை முயற்சி. சுய நினைவை இழந்த ஷாகிரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்த சிறைக் காவலர்கள்
சென்னை ராமாபுரத்தில் உள்ள கார் சர்வீஸ் சென்டரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு. கார் ஒன்று தீப்பற்றி எரிந்து வரும் நிலையில், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரம்
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள காக்கா தோப்பு பாலாஜியின் உடலை பார்வையிட்டு ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டார்.
ஜம்மு காஷ்மீரில் அமைதியாக நடந்து முடிந்த முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவில் 61 புள்ளி 13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
536 கோடி ரூபாய் மாநகராட்சி ஒப்பந்த முறைகேடு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் 10 சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 19-09-2024
கஞ்சா போதையில் கருகிய குடிசைகள்.... தத்தளிக்கும் குடும்பம்... கரம் கொடுக்குமா அரசு?’
பார்ட் டைமாக செல்போன் திருட்டு... வடமாநில நபர்களுக்கு கைவிலங்கு!
சிவகங்கையில் இரட்டை கொலை