K U M U D A M   N E W S

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 18 ஆயிரம் போலீசார் குவிப்பு...!

சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும், குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் 18,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

போலீசாரை அவதூறாக பேசிய 2 பேர் கைது.. தனிப்படை போலீசார் நடவடிக்கை

சென்னையில் மதுபோதையில் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட 2 பேரை லாட்ஜில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Thanglaan OTT Release: தங்கலான் ஓடிடி ரிலீஸுக்கு தடை கிடையாது... உயர்நீதிமன்றம் அதிரடி!

சீயான் விக்ரம் நடித்த தங்கலான் படத்தை, ஓடிடியில் ரிலீஸ் செய்ய தடைவிதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தங்கலான் படத்தின் ஓடிடி ரிலீஸுக்கு தடை கிடையாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்திற்காக பணத்தை வாரி இறைத்த கமலா... டிரம்ப் கூட இவ்வளவு செலவு செய்யலயாம் பா!

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், செப்டம்பர் மாதத்தில் மட்டும் விளம்பரங்களுக்காக சுமார் 270 மில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளார் கமலா ஹாரிஸ்.

அசுர வேகத்தில் பறந்து பல்டி அடித்த கார்.. காருக்குள் இருந்த தொழிலதிபர் கதி? - நெஞ்சை பிளக்கும் காட்சி

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே சாலை தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக காரை ஓட்டி வந்த நபர் உயிர் தப்பினார்.

குளம்போல் தேங்கிய மழைநீர்... "கால் வைக்கவே முடியல.." மதுரையில் கடுப்பான மக்கள்

கனமழையால் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி வெள்ள நீர் குளம் போல் தேங்கியது. இன்று நடைபெற்ற குறைதீர் கூட்ட முகாமிற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Jailer2: சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணையும் தனுஷ்... ஜெயிலர் 2 சம்பவம் தரமா இருக்கும்... மாஸ் அப்டேட்

நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2ம் பாகத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

“திராவிடர்கள் என்பது மரபினம்; தமிழர்கள் என்பது தேசிய இனம்” - சீமானுக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

சீமானுக்கு திராவிட அரசியல் மீது ஒரு எதிர்ப்புணர்ச்சி இருக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கொட்டித் தீர்த்த மழை.. வீட்டை சூழ்ந்த வெள்ளம்.. வெளியே வர முடியாமல் தவித்த மக்கள்

தேனி மாவட்டம் வரதராஜபுரம் புளியமரத்து ஓடையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் அவதியடைந்தனர்.

”அண்ணா நீ வா நா.. வா நா”.. அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி? அக்.31ம் தேதி என்னனு தெரிஞ்சுரும்!

ஐ.பி.எல் போட்டியில் தோனி விளையாடுவது குறித்து இம்மாத இறுதிக்குள் தெரியவரும் என சி.எஸ்.கே அணியின் ceo காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

காவலர்களிடம் மதுபோதையில் தகராறு... இருவரை பிடிக்க தனிப்படை அமைப்பு

சென்னை மெரினா கடற்கரையில் காவலர்களிடம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட இருவரை பிடிக்க சென்னை காவல்துறை தனிப்படை அமைத்தது.

போலீசை அநாகரிகமாக திட்டிய இருவர் தம்பதியே இல்லையா? இருவரை தட்டித் தூக்கிய போலீஸ்.. வெளியான பகீர் தகவல்கள்!

சென்னையில் போலீசை இழிவாக பேசிய சந்திரமோகன் மற்றும் அந்த பெண் ஆகிய 2 பேரும் பிடிபட்டனர். வேளச்சேரி பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் வைத்து பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sobhita Dhulipala: “பொண்ணு ரெடி.. மாப்பிள்ளை ரெடியா..?” திருமணத்துக்கு தயாரான சோபிதா துலிபலா!

நாகசைதன்யா, சோபிதா துலிபாலா திருமண ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், அதன் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

ஒரே நாளில் செம்ம வைரல்.. அடுத்த நாள் காலி..!! - வெடித்த நீட் அகாடமி விவகாரம்

நெல்லை நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையானது. இதைத்தொடர்ந்து நீட் பயிற்சி மையத்தில் விடுதி அனுமதி இல்லாமல் செயல்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், இரவோடு இரவாக விடுதியை காலி செய்து நீட் பயிற்சி மையம் மாணவர்களை வெளியேற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக டூ அதிமுக..முதன்முறையாக முக்கியமான போஸ்ட்.. கௌதமி இப்ப வேற லெவல்..!

சற்றும் எதிர்பாராத நேரத்தில்,கௌதமிக்கு அதிமுகவில் பொறுப்பு வழங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

நான் சொன்னா சொன்னதுதான்... இந்தி திணிப்பை தமிழ்நாடு ஏற்காது.. மாஸ் காட்டிய உதயநிதி ஸ்டாலின்!

திமுகவின் கடைசி தொண்டனும், தமிழனும் இருக்கும் வரை தமிழையும், தமிழனையும், திராவிடத்தையும் தொட்டு கூட பார்க்க முடியாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நடிகை கௌதமிக்கு அதிமுகவில் பொறுப்பு

பாஜகவுடன் ஏற்பட்ட நெருடல் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகிய நடிகை கௌதமி அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் அவர் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இர்ஃபானின் சர்ச்சை வீடியோ; மருத்துவத்துறை எடுத்த அதிரடி முடிவு

குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவதுபோல் யூடியூபர் இர்ஃபான் வெளியிட்ட வீடியோ சர்ச்சையானது. இந்நிலையில், மருத்துவர்கள் மற்றும் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்க மருத்துவ நல பணிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. தீபாவளி போனஸ் அறிவித்தது டாஸ்மாக் நிர்வாகம்

டாஸ்மாக்கில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், துணை விற்பனையாளர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.16,800 வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது 

ரஷ்யாவுக்கு உதவும் வடகொரியா.... ஆபத்தான கூட்டணிக்கு உலக நாடுகள் கண்டனம்!

வடகொரியா ரஷ்யாவுக்கு ராணுவ உதவி செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

அடுத்த 7 நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... புதிய எச்சரிக்கை!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டி.ஐ.ஜி ராஜலட்சுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்தது சிபிசிஐடி

வேலூர் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய விவகாரத்தில் டி.ஐ.ஜி ராஜலட்சுமியிடம் நேரடி விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

சவுக்கு சங்கர் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

ஜாமின் நிபந்தனைகளைத் தளர்த்தக்கோரி சவுக்கு சங்கர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், சென்னை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தவறாமல் ஆஜராகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Irfan: குழந்தை பிறந்த வீடியோ... அடுத்த சர்ச்சையில் யூடியூபர் இர்ஃபான்... மருத்துவமனைக்கு நோட்டீஸ்!

யூடியூபர் இர்ஃபான் தனது குழந்தைப் பிறப்பை வீடியோவாக எடுத்து வெளியிட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்ப மருத்துவ ஊரக நலப்பணிகள் இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.

"எல்லாத்துக்கும் காரணம் அது மட்டும் தான்"- பழநியில் கண் கலங்கி நிற்கும் மக்கள்

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே ஆயக்குடி பகுதியில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.