K U M U D A M   N E W S

இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய நபர்.. 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது..!

இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து வெளிநாடு தப்பிச் சென்றவர் 5 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை வந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார்..

பெண்குழந்தைகளுக்கு யாருமே உங்களை தொடக்கூடாது என்று சொல்லிக்கொடுங்கள் - உயர்நீதிமன்ற நீதிபதி பேச்சு

பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல்,  தீய தொடுதல் குறித்து சொல்லி தருவதை விட,  உன்னை யாருமே தொட விடக்கூடாது என கற்றுத்தாருங்கள் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்புராயன் தெரிவித்துள்ளார்.

சமூக ஆர்வலர்களை தாக்கிய மணல் மாஃபியாக்கள்!

மண் கடத்தல் குறித்து சமூக வலைதளங்களில் தகவல் வெளியிட்ட சமூக ஆர்வலர் மீது திமுக நிர்வாகி கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, தமிழகத்தில் சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி- சென்னை உயர் நீதிமன்றம்

சாதி, மதம் மற்றும் அரசியல் தொடர்பான நடனமோ, பாடலோ, பேனர்களோ இருக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் கடலூர் மாவட்டத்தில் இரு கோவில்கள் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதியளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிகில் முதல் இஃப்தார் வரை: பட்டியல் போட்டு விஜயை தாக்கிய ப்ளூசட்டை மாறன்!

”நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் தொடர்ந்து கோட்டை விடும் தமிழக வெற்றிக் கழகம். ரசிகர்கள், தொண்டர்களை கட்டுப்படுத்த தெரியாத விஜய்” என பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூசட்டை மாறன் பதிவிட்டுள்ள பதிவு சமூக வலைத்தளங்களில் ரணகளத்தை உண்டாக்கியுள்ளது.

விஜய் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் - அமைச்சர் கீதா ஜீவன்

தவெக தலைவர் விஜய் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், மக்களிடம் நேரடியாக சென்று பேச வேண்டும் என்றும் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

மகிளா சம்ரிதி யோஜனா: பெண்களுக்கு மாதம் ரூ.2500- வெளியானது சூப்பர் அப்டேட்!

டெல்லியில் ஆட்சிக்கு வந்துள்ள பாஜகவின் தேர்தல் வாக்குறுதியில் முக்கியமானதாக கருதப்பட்டது மகளிருக்கு ரூ.2500 உதவித்தொகை வழங்கும் “மகிளா சம்ரிதி யோஜனா” திட்டமாகும். இத்திட்டம் எப்போது தொடங்கும் என எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மகளிர் தினத்தை முன்னிட்டு மினி- மாரத்தான்.. ஏராளமானோர் பங்கேற்பு!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று (மார்ச்- 08)  தாம்பரம் மாநகர காவல்துறையின் சார்பில் மகளிர் அதிகாரம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை முன்னிறுத்தும் விதமாக ஒரு சிறப்பு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

அவர்களை விடுதலை செய்யுங்க" - அறிக்கைவிட்ட விஜய்

"பெண்களின் முழு பாதுகாப்பை வலியுறுத்தி, அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்ட தவெகவினரை கைது செய்வதா?" தமிழக அரசுக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடும் கண்டனம்

"பாஜகவுடன் கூட்டணி வைக்க தவம் இருக்கவில்லை"

பாஜக உடன் கூட்டணி வைக்க அதிமுக தவம் இருக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி

இ.பி.எஸ்.க்கு பிரம்மாண்ட சாக்லேட் மாலை... அதிமுகவினர் கோலாகலமாக கொண்டாட்டம்

தலைமை அலுவலகத்தில் அதிமுக சார்பில் மகளிர் தின கொண்டாட்டம்

மருத்துவர்கள் இல்லாத அவலம்.. வயிற்றில் இருந்த சிசுவுடன் உயிரிழந்த தாய்

பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட தாய், சேய் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு

புறநகர் ரயில்கல் ரத்து.. சென்னையில் கூடுதல் பேருந்துகள் இயக்க முடிவு

சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டுக்கு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு

மேகதாது விவகாரம் - வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை

மேகதாது அணை விவகாரம் - தமிழக அரசுக்கு, கன்னட சாலுவாலி வாடல் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை

திருத்தணி அரசு மருத்துவமனையில் அமைச்சர் நாசரை முற்றுகையிட்டு வாக்குவாதம்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அரசு மருத்துவமனையில் அமைச்சர் நாசரை முற்றுகையிட்டு போராட்டம் - பரபரப்பு

கட்டற்ற போதைப்புழக்கத்தால் சமூகமே குற்றச்சமூகமாக மாறி நிற்கிறது- சீமான் விளாசல்

திராவிட ஆட்சியில் நிலவும் கட்டற்ற போதைப்புழக்கத்தால் நாம் வாழும் சமூகமே குற்றச்சமூகமாக மாறி நிற்பதால்தான் பெண்கள் மீதான வன்கொடுமைகள் பன்மடங்கு பெருகியுள்ளது என்று சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

திண்ணை பிரசாரம் நடத்திய செல்லூர் ராஜூ.. பாய்ந்தது வழக்கு

மதுரையில் அனுமதியின்றி அதிமுக சார்பில் திண்ணை பிரசாரம் நடத்திய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது வழக்குப்பதிவு

தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்... பதிலளிக்க மறுத்த Premalatha Vijayakanth

தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் அனுமதி

கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக அமைக்கப்பட்ட தவெக மேடை அகற்றம்

வேலூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக அமைக்கப்பட்ட மேடை அகற்றம்

மீண்டும் வெடித்து சிதறிய எலான் மஸ்க் ராக்கெட்.. இதுதான் நடந்தது

விண்ணில் ஏவப்பட்ட 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்திற்கு சொந்தமான 'ஸ்டார்ஷிப் 8’ ராக்கெட் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"பெண்கள் சக்திக்கு தலைவணங்குவோம்"-பிரதமர் மோடியின் பதிவு!

பெண்களுக்கு அதிகாரம் அளிக்க மத்திய பாஜக அரசு எப்போதும் உழைத்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி கருத்து

கன்பார்ம் டிக்கெட் இருந்தால் தான் இனி ரயில் நிலையத்திற்குள் அனுமதி: ரயில்வே துறை அதிரடி!

பல ரயில் நிலையங்களில், நுழைவு பாதையினை தவிர்த்து சில குறுக்கு வழிகளிலும் ரயில் நிலையத்திற்குள் பயணிகள் வருகைத் தருகின்றனர். இதனை முறையாக கண்டறிந்து அனைத்து குறுக்குப்பாதைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தோண்டு.. தோண்டு.. ’சாவா’ பட எஃபெக்டால் தங்கத்தை தேடி நடுராத்திரி குவிந்த ஊர் மக்கள்

’சாவா’ திரைப்படத்தை பார்த்து அசிர்கார் கோட்டையில் இரவு 7 மணி முதல் நள்ளிரவு 3 மணி வரை தலையில் ஹெட்லைட், சல்லடையுடன் குடும்பம் குடும்பமாக மக்கள் தங்க புதயலை தேடி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

விஜய் கலந்து கொண்ட நோன்பு நிகழ்ச்சி.. லட்சக்கணக்கில் பணத்தை பறிகொடுத்த நிர்வாகிகள்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில்  ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் திருடப்பட்டதாக மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.