நடிகர் சிம்பு தனது உணவுப் பழக்கவழக்கங்களில் மேற்கொண்டுள்ள அதிரடி மாற்றங்கள் குறித்தும், ஆரோக்கியம் குறித்துப் பொதுமக்களுக்கு அவர் வழங்கியுள்ள ஆலோசனைகளும் தற்போது வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சிம்பு, தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் 'அரசன்' படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், "எனக்கு முன்பெல்லாம் பிரியாணிதான் பிடிக்கும். நாம் இளமையாக இருக்கும் வரை என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம். அந்த வயதில் நாம் துறுதுறுவென இருப்போம், உடல் எடை கூடாது.
ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். என்ன மாதிரி உணவு சாப்பிட வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு மக்களுக்குக் குறைவாக உள்ளது. எனக்கு அரிசி சோறு மிகவும் பிடிக்கும். ஆனால், அதில் சர்க்கரை சத்து அதிகமாக இருக்கிறது என்ற சிக்கல் வரும்போது, காய்கறி அதிகம் எடுத்துக்கொண்டு பின்னர் அரிசி உணவு சாப்பிட்டால் பெரிய பாதிப்பு இருக்காது.
இப்படியான சின்னச்சின்ன விஷயங்களைக் கவனமாக செய்தால் உதவிகரமாக இருக்கும். நான் இப்போது முழுக்க சைவமாக மாறிவிட்டேன். அசைவ உணவுகளை உண்ட பின்னர் சோர்வாக உணர்கிறேன். சைவம் சாப்பிட்டால் அப்படியான உணர்வு எதுவும் இல்லை. புரோட்டின் தேவைகளுக்கும்கூட சைவத்தில் இருந்து கிடைக்கும் புரோட்டின்களை எடுத்துக் கொள்கிறேன்.அதேசமயம், சைவம்தான் சிறந்தது என்று நான் சொல்லவில்லை. நான் சொல்லிவிட்டேன் என தடாலடியாக சைவத்துக்கு மாறுகிறேன் என மாறக்கூடாது" என்றார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சிம்பு, தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் 'அரசன்' படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், "எனக்கு முன்பெல்லாம் பிரியாணிதான் பிடிக்கும். நாம் இளமையாக இருக்கும் வரை என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம். அந்த வயதில் நாம் துறுதுறுவென இருப்போம், உடல் எடை கூடாது.
ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். என்ன மாதிரி உணவு சாப்பிட வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு மக்களுக்குக் குறைவாக உள்ளது. எனக்கு அரிசி சோறு மிகவும் பிடிக்கும். ஆனால், அதில் சர்க்கரை சத்து அதிகமாக இருக்கிறது என்ற சிக்கல் வரும்போது, காய்கறி அதிகம் எடுத்துக்கொண்டு பின்னர் அரிசி உணவு சாப்பிட்டால் பெரிய பாதிப்பு இருக்காது.
இப்படியான சின்னச்சின்ன விஷயங்களைக் கவனமாக செய்தால் உதவிகரமாக இருக்கும். நான் இப்போது முழுக்க சைவமாக மாறிவிட்டேன். அசைவ உணவுகளை உண்ட பின்னர் சோர்வாக உணர்கிறேன். சைவம் சாப்பிட்டால் அப்படியான உணர்வு எதுவும் இல்லை. புரோட்டின் தேவைகளுக்கும்கூட சைவத்தில் இருந்து கிடைக்கும் புரோட்டின்களை எடுத்துக் கொள்கிறேன்.அதேசமயம், சைவம்தான் சிறந்தது என்று நான் சொல்லவில்லை. நான் சொல்லிவிட்டேன் என தடாலடியாக சைவத்துக்கு மாறுகிறேன் என மாறக்கூடாது" என்றார்.
LIVE 24 X 7









