Selvaperunthagai Press Meet: பகுஜன் சமாஜ் மாநிலச் செயலாளர் ஜெய்சங்கரின் நடவடிக்கையால் தனது புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை நஷ்ட ஈடு கேட்டுள்ளார்.
''தமிழக மீனவர் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசின் உறுதியான நடவடிக்கையை விடியா திமுக அரசால் நிர்ப்பந்தித்து பெறமுடியவில்லை. தனக்கோ, தன்குடும்பத்திற்கோ தேவையென்றால், ஒரு நொடியில் சாதித்துக் கொள்ளும் ஸ்டாலின், தமிழக மீனவர்களுக்கோ, தமிழக நலனுக்கோ பாதிப்பு ஏற்படும்போது ஏனோதானோ என்று கடிதத்துடன் நிறுத்திக்கொள்கிறீர்கள்'' என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஜம்பு என்ற ரவுடியை வழக்கு ஒன்றில் கைது செய்வதற்காக போலீசார் சென்றனர். அப்போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதால் அவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
சென்னை நீலாங்கரை அக்கரை பகுதியில் ரவுடி சீசிங் ராஜா இன்று காலை போலீசார் என்கவுன்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அந்த இடத்தில் சோழிங்கநல்லூர் மாஜிஸ்திரேட் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னையில் நடைபெற்ற சொகுசு கார்களின் கண்காட்சியில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மட்டும் வழக்கமான ஒன்றாக இருந்துவந்த சொகுசு கார் கண்காட்சிகள் தற்போது சென்னையிலும் நடைபெற தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியில் BMW, Benz, Audi, Mustang உள்ளிட்ட கார்களின் உயர் ரக மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக மாறுதல்கள் செய்யப்பட்டு மெருகேற்றப்பட்ட கார்களின் அணிவகுப்பும் திரட்டிருந்த இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. இதனை ரசித்து பார்த்ததுடன் இளைஞர்கள் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.
சென்னையில் நடைபெற்ற சொகுசு கார்களின் கண்காட்சியில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மட்டும் வழக்கமான ஒன்றாக இருந்துவந்த சொகுசு கார் கண்காட்சிகள் தற்போது சென்னையிலும் நடைபெற தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியில் BMW, Benz, Audi, Mustang உள்ளிட்ட கார்களின் உயர் ரக மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக மாறுதல்கள் செய்யப்பட்டு மெருகேற்றப்பட்ட கார்களின் அணிவகுப்பும் திரட்டிருந்த இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. இதனை ரசித்து பார்த்ததுடன் இளைஞர்கள் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்பதால் அவர்களுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்ற சிபிசிஐடி கோரிக்கையை ஏற்று ஜாமின் மனுக்களை தள்ளுபடி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Israel Attack on Lebanon : லெபானில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் ஆயுதங்கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்புடைய இடங்களில் இருந்து மக்கள் வேளியேற வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவியை மர்ம கும்பல் கடத்தி வந்து தேனியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் மாணவியை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் விட்டு சென்ற நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
மீனவர் பிரச்னையில் உறுதியான நடவடிக்கை எடுக்காமல் முதலமைச்சர் பெயரளவுக்கு மட்டுமே கடிதம் எழுதுகிறார். மத்திய அரசின் உறுதியான நடவடிக்கையை திமுக அரசால் நிர்பந்தித்து பெற முடியவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.