நெல்லையில் கொலை...பொது பிரச்னையாக பார்க்கக்கூடாது - முன்னாள் டிஜிபி கருத்து
தமிழக காவல்துறையில் பற்றாக்குறை என சொல்ல முடியாது, இருப்பவர்கள் திறமையாக பணியாற்ற வேண்டும்.

நெல்லையில் முன்னாள் காவலர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தனி பிரச்னை, அதை பொது பிரச்சினையாக பார்க்கக்கூடாது என முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட பிரச்னை
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் பன்னாட்டு லயன்ஸ் சங்கம் மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசி அவர் கூறும்போது, “ ஏழரை கோடி மக்கள் வசிக்கின்ற தமிழகத்தில் குற்றங்கள் நடக்கும். ஆனால் அதனை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும். குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
Read more: தாய் மீது கொண்ட அதீத பாசம்..விபரீத முடிவெடுத்த பெண்... சோகத்தில் பிள்ளைகள்
நெல்லையில் முன்னாள் காவலர் எரித்து கொலை பெற்ற சம்பவம் குறித்த கேள்விக்கு, தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம். காவல்துறைக்கு என தனி குடும்பம் உள்ளது. அதனை தனிப்பட்ட பிரச்னையாக பார்க்க வேண்டும் பொது பிரச்சினையாக பார்க்க கூடாது.
பாலியல் குற்றச்சாட்டுகளைப் பொறுத்தவரை ஆசிரியர்கள் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகள் வரும். நான் பணியாற்ற கூடிய காலத்தில் பெண் ஆசிரியர் சில குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரை அபாண்டமாக கூறினார்கள். ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் கூறும்போது அது உண்மைதானா ? என விசாரிக்க கூடிய தைரியம் அதிகாரிகளுக்கு இருக்க வேண்டும்.
ஆன்லைன் மோசடி
இந்தியாவிலேயே வருடா.. வருடம் காவல்துறைக்கு ஆள் எடுக்கக்கூடிய ஒரே துறை தமிழக காவல்துறை தான். கடந்த காலங்களில் 10 ஆண்டுக்கு ஒருமுறை சப் இன்ஸ்பெக்டர் தேர்வு நடந்துள்ளது. வயது மூப்பு காரணமாக வாய்ப்பு இழந்தவர்கள் இருக்க மாட்டார்கள், அந்த மாதிரியான ஒரு அவல நிலை இருந்தது.
தமிழக காவல்துறையில் பற்றாக்குறை என சொல்ல முடியாது, இருப்பவர்கள் திறமையாக பணியாற்ற வேண்டும்.
புதிதாக காவல் துறையில் சேர்ப்பவர்கள் 100 பேரில் 35 பேர் இன்ஜினியரிங் படித்துள்ளனர்.65 பேர் டிகிரி முடித்தவர்கள். 15 பேர் போஸ்டர் கிராஜுவேட் முடித்தவர்களாக இருக்கின்றனர். ஆன்லைன் மோசடியை பொருத்தவரை உஷாராக இருக்கக்கூடியவர்கள் கூட ஒரு சில நேரங்களில் ஏமாறக்கூடிய சூழல் வந்துவிட்டது.
பணம் கேட்பவர்கள் உங்களிடம் otp கேட்பவர்கள் ஆகியோரிடம் சுதாரிப்பாக இருங்கள் ஒருவேளை பணத்தை இழந்து விட்டால், 1930 என்ற எண்ணுக்கு 24 மணி நேரத்திற்குள் அழையுங்கள், அப்படி அழைத்தால் கண்டிப்பாக பணம் மற்ற வங்கி கணக்குக்கு மாற்றப்படுவதற்கு முன் தடுத்து நிறுத்தப்படும் என கூறினார்.
What's Your Reaction?






