டெல்லி செல்லும் இபிஎஸ் இதை செய்யுங்கள்...உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்
இரு மொழி கொள்கை குறித்து தயவுசெய்து இபிஎஸ் அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக ஸ்தூபா ஸ்போர்ட்ஸ் அனலிட்டிக்ஸ் ( Stupa Sports Analytics ) மற்றும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (UTT) இணைந்து நடத்தும் WTT World Table Tennis Star Contender chennai 2025 டிராபியின் கோப்பையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.
WTT டேபிள் டென்னிஸ் தொடர்
இந்த விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கூடுதல் தலைமைச்செயலாளர் அதுல்யா மிஸ்ரா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி மற்றும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தலைமை நிர்வாகி அதிகாரி ஏகான்ஷ் குப்தா, ஸ்தூபா ஸ்போர்ட்ஸ் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ தீபக் மாலிக் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
Read more: 10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு அறிவிப்பு
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை இந்த WTT டேபிள் டென்னிஸ் தொடர் நடைபெற உள்ளது. கடந்த 2023 - 2024 ஆண்டுகளுக்கான இந்த தொடர் கோவாவில் நடைபெற்ற நிலையில் நடப்பாண்டுக்கான தொடர் முதன் முறையாக சென்னையில் நடைபெற உள்ளது. இன்று மற்றும் நாளை நடப்பு ஆண்டுக்கான தொடரின் தகுதி சுற்று நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 27-ம் தேதி முதல் பிரதான சுற்று ஆட்டங்கள் நடைபெற உள்ளது.
இந்த தொடரின் மொத்த பரிசு தொகை 2 லட்சத்து 75 ஆயிரம் அமெரிக்கா டாலாராக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒற்றையர் பிரிவில் 48 வீரர்களும், இரட்டையர் பிரிவில் 16 குழுவும் இடம் பெற்றுள்ளது. மொத்தம் 18 இந்திய வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளனர்.ஆடவர் ஒற்றை, மகளிர் ஒற்றை, ஆடவர் இரட்டையர், மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் உள்ளிட்ட 5 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளது. 25 நாடுகளை சார்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்த தொடரில் பங்கேற்று உள்ளனர். தமிழ்நாட்டின் சரத் கமல் இந்த தொடருடன் ஓய்வு பெற உள்ளார்.
தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, “WTT World Table Tennis Star Contender chennai 2025 டிராபியின் போட்டிகளை இன்று தொடங்கி வைத்துள்ளோம். இதற்காக தமிழக அரசு 3 கோடியே 20 லட்சம் ஒதுக்கி உள்ளது. 25 நாடுகளை சேர்ந்த 158 வீரர், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.
Read more: தேவநாதன் யாதவின் சொத்துக்களை ஏலம் விடலாமா?- உயர்நீதிமன்றம் கேள்வி
இந்தியாவில் இருந்து 18 வீரர் வீராங்கனைகள் இந்த டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்துக்கொள்ள உள்ளனர். நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். அதனை தொடர்ந்து வலியுத்துவோம் என கூறினார்.
தயவுசெய்து அழுத்தம் கொடுக்க வேண்டும்
இபிஎஸ் டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு, தமிழகத்தில் இருமொழி கொள்கைதான் என தீர்மானமாக சொல்லி உள்ளோம்.அதை தான் தொடர்ந்து கடைப்பிடிப்போம் என சட்டப்பேரவையில் அனைவரும் பேசியிருக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் டெல்லி சென்ற செய்தி வந்திருக்கிறது. முதலமைச்சர் கேட்டுக்கொண்டதுபோல முக்கியமான யாரையோ பார்க்க போறதாக சொல்கிறார்கள். அப்படி அவர்களை சந்திக்கும்போது, இரு மொழி கொள்கை குறித்து தயவுசெய்து அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் வைத்துள்ளார் என தெரிவித்தார்.
What's Your Reaction?






