K U M U D A M   N E W S

Author : VASUKI RAVICHANDHIRAN

கஜகஸ்தானில் சாம்பியன் பட்டம்.. உலக செஸ் சாம்பியன் ஷர்வானிகாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு!

கஜகஸ்தானில் நடைபெற்ற உலக 'கேடட்' செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 10 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அரியலூரைச் சேர்ந்த இளம் வீராங்கனை ஷர்வானிகாவுக்கு, சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விழுப்புரம் அருகே பயங்கர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த கார் தீப்பற்றி எரிந்ததில் 3 பேர் உடல் கருகி பலி!

விழுப்புரம் அருகே நடந்த கோர விபத்தில், கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரெனத் தீப்பற்றி எரிந்ததில், காரில் பயணித்த மூன்று பேர் உடல் கருகிப் பலியான நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சரஸ்வதி அலங்காரம்: வீணையுடன் காட்சியளித்த அன்னையை காண திரண்ட பக்தர்கள்!

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி உற்சவத்தின் ஒன்பதாம் நாளான இன்று (அக். 2) சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, அம்மன் வீணையுடன் கூடிய பிரத்யேக சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

இடுக்கியில் சோகம்.. ஹோட்டல் கழிவுத்தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 3 தமிழக தொழிலாளர்கள் பலி!

கேரள மாநிலம் இடுக்கியில் ஒரு ஹோட்டலின் கழிவுத் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர். மீட்புக் குழுவினர் புல்டோசர் மூலம் தொட்டியை இடித்து உடல்களை மீட்டனர்.

இந்தியாவின் மிகப் பணக்காரப் பெண்மணி... ஹுருன் தரவரிசையில் ரோஷ்னி நாடார் 3-வது இடம் பெற்று சாதனை!

HCL டெக்னாலஜிஸ் தலைவரான ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா, ரூ.2.84 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் ஹுருன் இந்தியாவின் பணக்காரப் பெண்மணி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். ஒட்டுமொத்தப் பட்டியலில் முதல் முறையாக டாப்-3-க்குள் ஒரு பெண் இடம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: மசோதா நிறைவேற்றப்படாததால் பெரும் பரபரப்பு!

புதிய நிதி மசோதாவை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால், அமெரிக்க அரசு நிர்வாகச் செயல்பாடுகள் தற்காலிகமாக முடங்கியுள்ளன. எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் நிபந்தனையை டிரம்ப் அரசு ஏற்காததால், இன்று நள்ளிரவு 12 மணி முதல் அத்தியாவசியமற்ற அனைத்து அரசுச் சேவைகளும் நிறுத்தப்படுகின்றன.

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம்: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.87,600-க்கு விற்பனை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக். 1, 2025) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 அதிகரித்து, ரூ.87,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திருவண்ணாமலை கொடுமை: ஆந்திரப் பெண் பலாத்கார வழக்கில் 6 மாதங்களில் உச்சபட்ச தண்டனை- மகளிர் ஆணையத் தலைவர் A.S.குமாரி உறுதி!

திருவண்ணாமலையில் 18 வயது ஆந்திரப் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 2 காவலர்களுக்கு 6 மாதங்களுக்குள் உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் A.S.குமாரி உறுதியளித்துள்ளார்.

35 கோடி ரூபாய் கோகைன் கடத்திய ‘ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்’ பட நடிகர் சென்னையில் கைது!

பாலிவுட் நடிகர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ கோகைன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த நடிகர், தனது டிராலியில் ரகசிய அறை அமைத்து, ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருளைக் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் அக்டோபர் 2 முதல் கனமழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அக்டோபர் 2 முதல் 4ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.