K U M U D A M   N E W S

Author : VASUKI RAVICHANDHIRAN

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஏற்பட்ட சோகம்..!

அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் நிலையில், போட்டிக்கு காளையை அழைத்துசென்ற காளையின் உரிமையாளர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முதல் பூத் கமிட்டி மாநாடு.. தனி விமானம் மூலம் கோவை பயணம்!

தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பூத் கமிட்டி மாநாடு இன்று கோவையில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறுகிறது. சென்னையிலிருந்து தனிவிமானம் மூலம் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கோவைக்கு சென்றுள்ளார். கோவை விமான நிலையத்தில் இருந்து அவர்களுக்கு Y- பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா... ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, கோவிந்தா முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தவெக கட்சியின் முதல் பூத் கமிட்டி மாநாடு: விஜய் பங்கேற்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பூத் கமிட்டி மாநாடு இன்று ( ஏப்ரல் 26 ) கோவையில் நடைபெற உள்ளது. இந்த பூத் கமிட்டி மாநாட்டில் தவெக தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருந்த நிலையில், கூட்டத்தில் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

IPL2025: தொடர் தோல்வியில் CSK.. நடப்பு சீசனில் 3-வது வெற்றியை ருசித்த SRH!

சென்னை சூப்பர்கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் தமிழகம் வருகை!

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 14 மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்த நிலையில், தனி வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. அட்டாரி - வாகா எல்லை மூடல்!

பஹல்காம் தாக்குதல் காரணமாக பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு கெடு விதித்த நிலையில், அட்டாரி வாகா எல்லையில் வெளியேறி வருகின்றனர்.

தேர்தல் ஆணையத்திற்கு பதவி நீக்கம் செய்யப்பட்ட கவுன்சிலர்கள் கடிதம்!

தேர்தல் ஆணையம், சென்னை, தாம்பரம், மாநகராட்சி, உசிலம்பட்டி, நகராட்சி, கவுன்சிலர்கள், பதவி நீக்கம்

இபிஎஸ்-க்கு எதிரான அவதூறு வழக்கு.. நேரில் ஆஜராக விலக்கு!