K U M U D A M   N E W S

Author : Sumalekha M

“என்னிடம் கெஞ்சினார்” – ட்ரம்ப் பேச்சுக்கு மெலோனியின் அதிரடி பதிலடி!

ஜி7 மாநாட்டைத் தொடர்ந்து இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை கிளப்பியுள்ளன. அதற்கு மெலோனி கடும் பதிலடி கொடுத்த நிலையில், இந்த விவகாரம் அமெரிக்கா–இத்தாலி உறவுகளில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

பணம் வராமல் தவிக்கும் விவசாயிகள்... நெல் கொள்முதலில் புதிய பிரச்னை!

மத்திய அரசு சார்பில் ஏஜென்ட்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட நெல் கொள்முதலுக்கான பணம் பல மாதங்களாக வழங்கப்படாததால், திருவண்ணாமலை உள்ளிட்ட வடமாவட்ட விவசாயிகள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் அரசியல் ஆட்டமா? தவெக நிர்வாகிகள் மீது சர்ச்சை!

அரசுப் பள்ளிகளில் ஆய்வு என்ற பெயரில் தவெக நிர்வாகிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், பள்ளி வளாகங்களில் பிறந்தநாள் கொண்டாட்டம், அரசியல் நிகழ்வுகள் உள்ளிட்ட சம்பவங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.இதனை பிற கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

சிறுவர்களை குறிவைத்த பாலியல் வலை... சிவகங்கையை உலுக்கும் போலீஸ் விசாரணை

சிவகங்கையில் பள்ளி மாணவர்களை குறிவைத்து போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கி பாலியல் சுரண்டலில் ஈடுபட்ட கும்பல் குறித்து போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி, பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் கரைகிறதா தி.மு.க.? செந்தில்பாலாஜி மீது அதிகரிக்கும் அதிருப்தி

கோவை தி.மு.க.வில் செந்தில்பாலாஜியின் செயல்பாடுகள் மற்றும் கரூர் ஆதிக்கம் குறித்த அதிருப்தி தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகள், சீட் ஒதுக்கீடு மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள், மாவட்டக் கழகத்திற்குள் புதிய உள்கட்சிப் பூசலை உருவாக்கியுள்ளன.

தி.மு.க.வை விமர்சித்த அமைச்சர் ஷாஜகான்... அரசியலில் புதிய சலசலப்பு!

தி.மு.க ஆதரவுடன் வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைச்சர் ஷாஜகானின் தி.மு.க. குறித்த கருத்துகள் கூட்டணிக்குள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அவரது பேச்சுக்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு குரல்கள் எழுந்துள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நீடிக்கிறது.

ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் ராஜபக்சேவுக்கு நெருக்கடி... இலங்கையில் மீண்டும் பரபரப்பு!

2019 ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் உளவுத்துறை தலைவர் சுரேஷ் சாலே மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் நாடாளுமன்றத்தில் வெளியான தகவல்கள், முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கும் சட்ட நெருக்கடியை உருவாக்கியுள்ளன. இதனால் இலங்கையில் மீண்டும் அரசியல் மற்றும் சட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெருநகரங்களில் மாறும் பாலியல் கலாசாரம்... அதிகரிக்கும் HIV அச்சம்!

கர்நாடகாவில், குறிப்பாக பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் HIV மற்றும் பிற பாலியல் தொற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவத் தரவுகள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பற்ற உடலுறவு, போதைப்பழக்கம் மற்றும் நகர்ப்புற வாழ்க்கைமுறை மாற்றங்கள் குறித்து நிபுணர்கள் விழிப்புணர்வு அவசியம் என வலியுறுத்துகின்றனர்.

புனித ஜோசப்புடன் முதல்வர் விஜய்யை ஒப்பிட்ட அமைச்சர்: கிறிஸ்தவர்கள் கொந்தளிப்பு!

சட்டமன்றத்தில் முதல்வர் விஜய்யை பைபிளின் ஜோசப்புடன் ஒப்பிட்டு அமைச்சர் மரிய வில்சன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒப்பீடு கிறிஸ்தவ மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக கூறி, பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகள் அமைச்சரிடம் மன்னிப்பு கோரியுள்ளன.

ஈரக் குலையறுத்த இறால் ஆலை! அப்பாவி உயிர்களை பறித்த அமோனியா வாயு

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைபேர் பகுதியில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவால் எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.