நகை கடன் பெற புதிய விதிகள்
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக்ககடன் வழங்குவது குறித்து ரிசர்வ் வங்கி 9 வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகளை அறிவித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் தங்க நகை அடமானம் வைப்பதில் இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளைக் கொண்டு சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி உள்ளதாக தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களை பாதிக்கும் முடிவு
இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “ தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி.
ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களே பெரும்பாலும் தங்களது அவசர தேவைகளுக்கு தங்க நகைக் கடன் போன்றவற்றைச் சார்ந்திருக்கும் சூழலில் அதன் மீது மத்திய ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் புதிய விதிமுறைகள் சாமானிய மக்களை பாதிக்கும் செயலாக அமைந்துள்ளது. குறிப்பாக நகையின் மதிப்பில் முன்பை விட 5% குறைத்து, 75% தான் கடன் வழங்கப்படும் என்ற புதிய விதிமுறை அவசர தேவைக்காக வங்கிகளை நாடிவரும் மக்களை நேரடியாகப் பாதிக்கும் முடிவாகும்.
கட்டுப்பாடுகளை திரும்பப் பெற வேண்டும்
அவசரம் என்று வரும் மக்களை அத்தியாவசியமற்ற விவரங்களையும், ஆதாரங்களையும் கேட்டு அலைக்கழிக்கும் இந்த புதிய நடைமுறையை மத்திய ரிசர்வ் வங்கி உடனடியாக கைவிட வேண்டும்.
அடமானம் வைத்த நகையை முழுவதுமாக மீட்ட பிறகே மீண்டும், அந்த நகையை அடமானம் வைக்க முடியும் என்ற புதிய விதிமுறையைக் கடந்த மாதம் RBI கொண்டு வந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், தற்போது மேலும் புதிய 9 விதிமுறைகள் என்ற பெயரில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது, நேரடியாக ஏழை எளிய மக்களைப் பாதிக்கும் செயலாகும். RBI உடனே இத்தகைய கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன்” என தெரிவித்துள்ளார்.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக்ககடன் வழங்குவது குறித்து ரிசர்வ் வங்கி 9 வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகளை அறிவித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் தங்க நகை அடமானம் வைப்பதில் இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளைக் கொண்டு சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி உள்ளதாக தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களை பாதிக்கும் முடிவு
இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “ தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி.
ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களே பெரும்பாலும் தங்களது அவசர தேவைகளுக்கு தங்க நகைக் கடன் போன்றவற்றைச் சார்ந்திருக்கும் சூழலில் அதன் மீது மத்திய ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் புதிய விதிமுறைகள் சாமானிய மக்களை பாதிக்கும் செயலாக அமைந்துள்ளது. குறிப்பாக நகையின் மதிப்பில் முன்பை விட 5% குறைத்து, 75% தான் கடன் வழங்கப்படும் என்ற புதிய விதிமுறை அவசர தேவைக்காக வங்கிகளை நாடிவரும் மக்களை நேரடியாகப் பாதிக்கும் முடிவாகும்.
கட்டுப்பாடுகளை திரும்பப் பெற வேண்டும்
அவசரம் என்று வரும் மக்களை அத்தியாவசியமற்ற விவரங்களையும், ஆதாரங்களையும் கேட்டு அலைக்கழிக்கும் இந்த புதிய நடைமுறையை மத்திய ரிசர்வ் வங்கி உடனடியாக கைவிட வேண்டும்.
அடமானம் வைத்த நகையை முழுவதுமாக மீட்ட பிறகே மீண்டும், அந்த நகையை அடமானம் வைக்க முடியும் என்ற புதிய விதிமுறையைக் கடந்த மாதம் RBI கொண்டு வந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், தற்போது மேலும் புதிய 9 விதிமுறைகள் என்ற பெயரில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது, நேரடியாக ஏழை எளிய மக்களைப் பாதிக்கும் செயலாகும். RBI உடனே இத்தகைய கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன்” என தெரிவித்துள்ளார்.