இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் (S.S.L.C) எனப்படும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (16.05.2025) வெளியிடப்பட்டுள்ளன. மார்ச் / ஏப்ரல் 2025 மாதங்களில் நடைபெற்ற இந்த தேர்வை, மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான மாணவர்கள் எழுதியிருந்தனர்.
முக்கிய புள்ளிவிவரங்கள்:
-->தேர்வு நடைபெற்ற நாட்கள்: 28.03.2025 முதல் 15.04.2025 வரை
-->தேர்வெழுதிய மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை: 8,71,239
-->மாணவிகளின் எண்ணிக்கை: 4,35,119
-->மாணவர்களின் எண்ணிக்கை: 4,36,120
தேர்ச்சி விவரங்கள்:இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 93.80% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 8,17,261 ஆகும். தேர்ச்சி பெற்ற மாணவிகள்: 4,17,183 (95.88%) தேர்ச்சி பெற்ற மாணவர்கள்: 4,00,078 (91.74%). இந்த முடிவுகளின்படி, மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்றுள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை விட 4.14% அதிகமாக உள்ளது. மேலும், இந்த தேர்வுகளுக்காக வருகை புரியாத மாணாக்கர்களின் எண்ணிக்கை 15,652 ஆகும்.
அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற முதல் 5 மாவட்டங்கள்:
-->சிவகங்கை- 98.31%
-->விருதுநகர்- 97.45%
-->தூத்துக்குடி- 96.76%
-->கன்னியாகுமரி- 96.66%
-->திருச்சி- 96.61%
அரசுப் பள்ளி மாணாக்கர்களில் சிறப்பான தேர்ச்சியில் முதல் 5 மாவட்டங்கள்:
அரசுப் பள்ளி மாணாக்கர்களும் இந்த தேர்வுகளில் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளனர். அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற முதல் 5 அரசுப் பள்ளிகள் அடங்கிய மாவட்டங்கள் முறையே:
-->சிவகங்கை: 97.49%
-->விருதுநகர்: 95.57%
-->கன்னியாகுமரி: 95.47%
-->திருச்சி: 95.42%
-->தூத்துக்குடி: 95.40%
பிற முக்கிய புள்ளிவிவரங்கள்:
-->தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணாக்கர்களின் எண்ணிக்கை: 12,290. அவர்களில் தேர்ச்சி பெற்றோர்: 11,409 (92.83%).
-->தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை: 237. அவர்களில் தேர்ச்சி பெற்றோர்: 230 (97.05%).
-->தேர்வெழுதிய தனித்தேர்வர்களின் எண்ணிக்கை: 23,769. அவர்களில் தேர்ச்சி பெற்றோர்: 9,616 (40.46%).
முக்கிய புள்ளிவிவரங்கள்:
-->தேர்வு நடைபெற்ற நாட்கள்: 28.03.2025 முதல் 15.04.2025 வரை
-->தேர்வெழுதிய மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை: 8,71,239
-->மாணவிகளின் எண்ணிக்கை: 4,35,119
-->மாணவர்களின் எண்ணிக்கை: 4,36,120
தேர்ச்சி விவரங்கள்:இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 93.80% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 8,17,261 ஆகும். தேர்ச்சி பெற்ற மாணவிகள்: 4,17,183 (95.88%) தேர்ச்சி பெற்ற மாணவர்கள்: 4,00,078 (91.74%). இந்த முடிவுகளின்படி, மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்றுள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை விட 4.14% அதிகமாக உள்ளது. மேலும், இந்த தேர்வுகளுக்காக வருகை புரியாத மாணாக்கர்களின் எண்ணிக்கை 15,652 ஆகும்.
அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற முதல் 5 மாவட்டங்கள்:
-->சிவகங்கை- 98.31%
-->விருதுநகர்- 97.45%
-->தூத்துக்குடி- 96.76%
-->கன்னியாகுமரி- 96.66%
-->திருச்சி- 96.61%
அரசுப் பள்ளி மாணாக்கர்களில் சிறப்பான தேர்ச்சியில் முதல் 5 மாவட்டங்கள்:
அரசுப் பள்ளி மாணாக்கர்களும் இந்த தேர்வுகளில் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளனர். அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற முதல் 5 அரசுப் பள்ளிகள் அடங்கிய மாவட்டங்கள் முறையே:
-->சிவகங்கை: 97.49%
-->விருதுநகர்: 95.57%
-->கன்னியாகுமரி: 95.47%
-->திருச்சி: 95.42%
-->தூத்துக்குடி: 95.40%
பிற முக்கிய புள்ளிவிவரங்கள்:
-->தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணாக்கர்களின் எண்ணிக்கை: 12,290. அவர்களில் தேர்ச்சி பெற்றோர்: 11,409 (92.83%).
-->தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை: 237. அவர்களில் தேர்ச்சி பெற்றோர்: 230 (97.05%).
-->தேர்வெழுதிய தனித்தேர்வர்களின் எண்ணிக்கை: 23,769. அவர்களில் தேர்ச்சி பெற்றோர்: 9,616 (40.46%).