ஆன்மிகம்

சனிக்கிழமையன்று பிறந்தவரா நீங்கள்? உங்களுக்கான பிரத்யேக பலன்கள்

இந்த பிரத்யேக பலன்கள் குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மட்டும்னு இல்லாம, உங்களுக்கு வாழ்நாள் முழுமைக்குமே எந்த நாள் எப்படி அமையும்னு சட்டுன்னு தெரிஞ்சுக்க வழிகாட்டியா இருக்கும். அவ்வப்போதைய கோள்சார அமைப்புக்கு ஏற்ப இந்தப் பலன்கள் அதிகமாகவோ சற்றே குறைவாகவோ மாறலாம்.

சனிக்கிழமையன்று பிறந்தவரா நீங்கள்? உங்களுக்கான பிரத்யேக பலன்கள்
Power of Saturday Born Individuals- astrologer shelvi prediction
ஜோதிட சாஸ்திரத்தின்படி இந்த உலகத்துல உள்ள எல்லாருமே, இருபத்தேழு நட்சத்திரம், பன்னிரண்டு ராசி,ஞாயிறு முதல் சனி வரையிலான ஏழு நாள்ல ஏதாவது ஒரு நாள்லதான் பிறந்திருப்பாங்க. ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனின்னு சொல்லும்போதே ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு கிரகத்தோட தொடர்பு இருக்கு என்பது சொல்லாமலே புரியும்.

அந்த வகையில் சனிக்கிழமையன்று பிறந்தவர்களாக நீங்கள் இருப்பின் உங்களுக்கான பதிவு இது. உங்களின் குணாதிசயம் எப்படி இருக்கும்? அதுல எந்தவகையான மாற்றங்கள் செய்துகிட்டா நன்மைகளை அதிகம் பெறலாம் என்பதை குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் ஜோதிடர் ஷெல்வீ. அதன் விவரங்கள் பின்வருமாறு-

அனுபவத்தை தரும் சனிபகவான்:

பொதுவா சனிபகவான் பெயரைச் சொன்னாலே பலருக்கும் ஒருவித பயம்தான் ஏற்படும்க. ஆனா, உண்மையில் நவகிரக நாயகர்கள்ல மிக நல்லவர் சனிபகவான்தான்க. எப்படி ஒரு ஆசிரியர் தன்னுடைய மாணவர்களை கண்டிப்பாக நடத்தினாலும், அதன்பலனாக அவர்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய வழிசெய்வாரோ அப்படித்தான்க சனீஸ்வரனும். வாழ்க்கைப் பாடத்தை ஒருத்தர் சரியாக புரிஞ்சுக்கணும்னா, அதுக்கான அனுபவத்தை பாடமாக தரக்கூடியவர் சனிபகவான்தான்க.

சனிபகவானை ஜோதிட சாஸ்திரம் ஆயுள்காரகன்னு சொல்லுதுங்க. தர்மத்தின் காவலனான சனைச்சரனோட ஆதிக்கம் உள்ள சனிக்கிழமைல பிறந்த நீங்க நல்லவருக்கு நல்லவராகவும் கெட்டவருக்கு கெட்டவராகவும் இருப்பீங்க. வம்பு சண்டைக்குப் போறதும் வீண்வாதங்கள் பண்ணுவதும் உங்களுக்கு பிடிக்கவே பிடிக்காதுங்க.

தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதை உணர்ந்தவர் நீங்க. எத்தகைய கடுமையான பணியாக இருந்தாலும் தன்னம்பிக்கையோடயும் விடா முயற்சியோடேயும் செய்துமுடிக்கக் கூடியவர் நீங்க. தரப்படும் பணி சிறியதாக இருந்தாலும் அதற்கு உரிய உழைப்பு அதிகமா இருக்கறது உங்க வாழ்க்கைல பலமுறை ஏற்படும்க. அதுக்கு காரணம், எல்லாம் தெரியும் என்கிற எண்ணத்துல எதையுமே யோசிக்காமத் தொடங்கிடற உங்க குணம்தான்க. திட்டமிட்டு செயல்பட்டீங்கன்னா, சகலத்திலும் நீங்க வல்லவராகவே இருக்க முடியும்க.

ரகசியங்களை யாரிடமும் பகிராதீங்க:

உங்களுக்காக செயல்படறதை விட மற்றவங்களுக்காக பணி செய்யக் கூடிய உதவும் குணம் உங்களுக்கு இருக்கும்க. இதை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கறதை நீங்க உணராமலே இருக்கறதுக்குக் காரணம், முகஸ்துதிக்கு எளிதாக மயங்கிடறதுதான்க. அதைப் புரிஞ்சுகிட்டாலே பல சங்கடங்களைத் தவிர்க்கலாம்க.

எல்லா விஷயத்திலும் வல்லவரான நீங்க, எந்தக் காரணத்துக்காகவும் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்துக்க வேண்டாம்க. பணியிடத்துல உங்க பொறுப்புகளைப் பத்தி மூன்றாம் நபரிடம் சொல்வதும் தப்புங்க. உங்கமேல உண்மையான அக்கறை உள்ள குடும்ப உறுப்பினர்கள் சொல்லக்கூடிய ஆலோ சனைகளை அவசியம் கேளுங்க. எல்லாமே ஏற்றமாகும். சட்டுன்னு உணர்ச்சிவசப்படறதும், அடிக்கடி டென்ஷனுக்கு ஆளாகறதும் உங்க குணமாக இருக்கலாம்க. அதுவே உங்களை எந்தச் செயலையும் சரிவர செய்ய இயலாதபடி தடையாக மாறக்கூடும்க. படபடப்பும் பரபரப்பும் உங்க உடல்நலத்துக்குக் கேடாக மாறிடலாம் அதனால, தினமும் சிறிது நேரமாவது தியானம், யோகா பழகுங்க. நிதானத்தை வளர்த்துக்குங்க.

பலதரப்பட்ட விஷயங்களை அனுபவப் பாடமாகக் கத்துக்கக் கூடியவர் நீங்க. அந்த அனுபவத்தால, உங்க குடும்பத்து உறுப்பினர்கள்கிட்டே நீங்க காட்டக்கூடிய கண்டிப்பும், அதிகாரமும் உங்களோட குணத்தை கர்வமாகத்தான் காட்டும்க.

தவறை சுட்டிக்காட்டினால் ஏற்றுக்கொள்ளுங்க:

வார்த்தகளைக் கட்டளையாக இல்லாம கனிவானதாக இனிமை கலந்து, அன்போட சொல்லுங்க. அது நிச்சயம் பலன் தரும். அதேமாதிரி உங்க தவறுகளை யாராவது சுட்டிக் காட்டினா அதுல உண்மை இருக்கும் பட்சத்துல ஏற்றுக்குங்க. அதுதான் உங்களோட வாழ்க்கைல வெற்றிக்கான பாடமாக இருக்கும்க.8, 17, 26 ஆகிய தேதிகள், சனிக்கிழமையில பிறந்த உங்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும்க. அதிலும் அந்தத் தேதிகள்ல ஏதாவது ஒரு தேதியில நீங்க பிறந் திருந்தா, அது இரட்டிப்பு நன்மை அளிக்கக்கூடியதாக இருக்கும்க. எந்தவிதமான புதிய முயற்சியை நீங்க தொடங்கினாலும் அதை இந்தத் தேதிகள்ல ஏதாவது ஒன்றுல தொடங்கறது நல்லதுங்க.

அதிர்ஷ்டம் தரும் வயது:

உங்களுடைய வாழ்நாள்ல, 22, 26, 31, 35, 42, 50, 53, 58, 62, 67, 71, 80 ஆகிய வயதுகள் உங்களுக்கு நடக்கக்கூடிய காலகட்டங்கள்ல திடீர் அதிர்ஷ்டம், கல்வி உயர்வுகள், திருமணப்பேறு, நல்ல பணி அமைதல் இப்படியான அதிர்ஷ்டங்களை உங்களுக்குத் தருவதாக இருக்கும்க. எதிர்பாராத நன்மைகள், பணவரவு, ஏற்றமும் மாற்றம் எல்லாமே அந்த சமயங்கள்ல ஏற்படும்க.

சனிக்கிழமைகள்ல அதிகாலையிலயே எழுந்து நீராடிட்டு, காலை ஆறுமுதல் ஏழு மணிக்குள்ள விநாயகர் படத்துக்கு முன்னால நெய்தீபம் ஏற்றிவைச்சு வணங்கறது நல்லதுங்க. மாதம் ஒரு சனிக்கிழமையில பக்கத்துக் கோயில்ல இருக்கற பெருமாள், தாயார், அனுமனை ஆராதியுங்க. மாதம் ஒரு சனிக்கிழமை ஏழை மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால முடிஞ்ச உதவியை பண்ணுங்க. தினமும் கணபதி, அனுமன் துதிகளை சொல்லுங்க, கேளுங்க. வாழ்க்கை சந்தோஷமானதாக அமையும்.

தலைசுற்றல், மயக்கம், தோல்நிற மாற்றம், நரம்புகளில் குறைபாடு, மனத் தடுமாற்றம், சுவாச உபாதைகள் வரலாம்க. முதல் அறிகுறியிலயே முறையான சிகிச்சை எடுத்துக்கறது பூரண நலம் தரும்க. நெருப்பு, மின்சாரம் சார்ந்த பணிகள்ல கவனமா இருங்க. கூர்மையான உப கரணங்களை எச்சரிக்கையா பயன்படுத்துங்க. இதெல்லாம் உங்க உடல்நலம் சீராக இருக்க அவசியம் உணர்ந்து செயல்படுங்க, வாழ்க்கை உன்னதமாகும்.

வருஷத்துக்கு ஒருதடவை பஞ்சவடி திருத்தலத்துக்குச் சென்று பஞ்சமுக அனுமனை ஆராதியுங்க. கஷ்டங்கள் எல்லாம் பஞ்சாகப் பறந்து, வாழ்க்கை பிரகாசிக்கும்.