Priyanka vs Manimegalai Issue : கதறி அழுத பிரியங்கா.. மணிமேகலை பிரச்சினையை பேசி தீர்க்கலாமே.. பஞ்சாயத்துக்கு வந்த வனிதா

Priyanka Deshpande vs Manimegalai Issue : ஒரு பெண்ணுடைய மனது பொண்ணுக்கு தான் தெரியவேண்டும் என்று வனிதா பேசியுள்ளார்.குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் எதோ ஈகோ பிரச்சினை காரணமாக இருவருக்கும் சண்டை நடந்துள்ளது. அதனை இருவரும் பேசி தீர்த்துக்கொள்ளவேண்டும்.

Sep 24, 2024 - 13:18
Sep 24, 2024 - 15:52
 0
Priyanka vs Manimegalai Issue : கதறி அழுத பிரியங்கா.. மணிமேகலை பிரச்சினையை பேசி தீர்க்கலாமே.. பஞ்சாயத்துக்கு வந்த வனிதா
actress vanitha talks about priyanka vs manimegalai

Priyanka Deshpande vs Manimegalai Issue : விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில்(Cooku with Comali) தொகுப்பாளினிகள் மணிமேகலை,பிரியங்கா இடையே ஏற்பட்ட பிரச்சினைதான் தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பிரியங்காவிற்கு ஆதரவாக ஒரு சிலரும் மணிமேகலைக்கு ஆதரவாக மற்றொரு தரப்பினரும் பேசி வருகின்றனர். பிரச்சினையை இருவருமே பேசி தீர்க்கலாம் என்று கூறியுள்ளார் நடிகை வனிதா.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடந்த சம்பவம் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.தொகுப்பாளினி மணிமேகலை பதிவிட்ட ஒரு போஸ்ட்தான் பலரும் பேச காரணமானது. பிரியங்காவை பலரும் சகட்டு மேனிக்கு திட்டினர். பிரியங்காவிற்கு ஆதரவாகவும் பலரும் வீடியோ பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வனிதாவிடம்(Vanitha) மணிமேகலை பிரியங்கா பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்குப் பதில் அளித்த வனிதா(Vanitha) "நான் இந்த பிரச்சனை குறித்து மணிமேகலைக்குக் கால் செய்து நான் பேசவில்லை. ஆனால், பிரியங்காவிடம் பேசினேன். அவர் இந்த விஷயத்தில் ரொம்பவே வேதனையடைந்தார்.இப்போது அவர் நம்ம நாட்டில் இல்லை. அவர் வேலை விஷயமாக வெளியே சென்று இருக்கிறார். 

அதையும், பலர் பிரியங்கா(Priyanka) தவறாக பேசுகின்றனர். இந்த பிரச்சனை காரணமாகத் தான் நாட்டை விட்டு ஓடிவிட்டார் என எழுதுகிறார்கள். ஆனால் அந்த பொண்ணு இந்த பிரச்சனைகள் தொடங்குவதற்கு முன்பே டிக்கெட் புக் செய்து அயர்லாந்திற்குச் சென்று இருக்கிறார்.

கால் செய்து பேசும்போது அப்படிக் கண்கலங்கி என்னிடம் கதறி அழுதார். அதனைப் பார்க்கும்போது ரொம்பவே பாவமாக இருக்கிறது. ஒரு பெண்ணுடைய மனது பொண்ணுக்கு தான் தெரியவேண்டும். 

நிகழ்ச்சியில் எதோ ஈகோ பிரச்சினை காரணமாக இருவருக்கும் சண்டை நடந்துள்ளது. அதனை இருவரும் பேசி தீர்த்துக்கொள்ளவேண்டும். இந்த மாதிரி சமயத்தில் பிரியங்காவுடைய குணத்தை அசிங்கப்படுத்தி வருகிறார்கள். எனவே, அவருக்கு ஆதரவாகச் சிலர் பேசும்போது அவர்களைச் சொம்பு என்பது போலப் பேசி மணிமேகலை(Manimegalai) வீடியோ போடுவது நல்லது அல்ல. இனிமேல் அதுபோன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் எனவும் மணிமேகலைக்கு அட்வைஸ் செய்துள்ளார் வனிதா.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow