“நான் யாருக்கும் வாழ்க்கை கொடுக்கல... இந்தப் படமே அவருக்காக தான்..” சிவகார்த்திகேயன் ஓபன்!

சூரி ஹீரோவாக நடித்துள்ள கொட்டுக்காளி படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், தனுஷை மறைமுகமாக அட்டாக் செய்துள்ளாரா என சமூக வலைத்தளங்களில் விவாதம் எழுந்துள்ளது.

Aug 13, 2024 - 16:07
Aug 14, 2024 - 10:00
 0
“நான் யாருக்கும் வாழ்க்கை கொடுக்கல... இந்தப் படமே அவருக்காக தான்..” சிவகார்த்திகேயன் ஓபன்!
சிவகார்த்திகேயன் - சூரி

சென்னை: சின்ன திரை ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பிரபலமான சிவகார்த்திகேயன், மெரினா திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து தனுஷின் 3 என்ற படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். அப்போது முதல் தனுஷின் நெருங்கிய நட்பு வட்டத்தில் சிவகார்த்திகேயனுக்கு தனி இடம் இருந்தது. அதேபோல், சிவகார்த்திகேயனின் எதிர் நீச்சல் படத்தையும் தனுஷ் தயாரித்திருந்தார். இந்நிலையில், தனுஷ் – சிவகார்த்திகேயன் இடையே திடீரென ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவருமே பிரிந்தனர். அதேநேரம் சிவகார்த்திகேயனும் அவரது கேரியரில் உச்சம் தொட்டார்.      

இந்நிலையில், கொட்டுக்காளி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், சிவகார்த்திகேயன் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சூரி நடித்துள்ள கொட்டுக்காளி படத்தை சிவகார்த்திகேயன் தனது பேனரில் தயாரித்துள்ளார். தனக்கென ஒரு மார்க்கெட் உருவானது முதலே, பட தயாரிப்புகளில் ஈடுபட்டு வந்தார் சிவா. ஆனால் இடையே சில படங்கள் தோல்வியடைந்ததால் சிவகார்த்திகேயனுக்கு ஏகப்பட்ட நஷ்டம், அதோடு பல கோடி கடன் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. இந்த வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கொட்டுக்காளி படத்தை தயாரித்துள்ளார் சிவகார்த்திகேயன்.   

பிஎஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ள கொட்டுக்காளி வரும் 23ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இன்று ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில், இயக்குநர்கள் வெற்றிமாறன், மிஷ்கின், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். சிவகார்த்திகேயன் – சூரி இருவரும் சினிமா மட்டுமில்லாமல், ரியலாகவும் அண்ணன், தம்பியாக பழகி வருகின்றனர். இதனால் தான் சூரியின் கொடுக்காளி படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்ததாக சொல்லப்பட்டது. ஆனால், இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ்ஜை கொண்டாட தான் இந்தப் படத்தை தயாரித்துள்ளதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். 

கூழாங்கல் படம் பார்த்துவிட்டு, வினோத்ராஜ் அடுத்து என்ன கதை வைத்திருந்தாலும், அதனை படமாக தயாரிக்க வேண்டும் என முடிவு செய்தேன். அதனால் அவரிடம் இந்தப் படத்தின் கதையை கூட கேட்காமல் பட்ஜெட்டை மட்டும் கேட்டுக்கொண்டு தயாரிக்க ஒப்புக்கொண்டேன். இந்தப் படம் வெளியாகி பட்ஜெட்டை விட அதிகமாக லாபம் கொடுத்தால், அதனை அப்படியே எடுத்து வினோத்ராஜ்ஜின் அடுத்த படத்துக்கு அட்வான்ஸ் கொடுத்துவிடுவேன். நீங்க அடுத்து என்ன படம் எடுக்க விருப்பமோ, அத அப்படியே இயக்கலாம். அதேபோல், கொட்டுக்காளி படத்தில் இன்னும் அதிக லாபம் கொடுத்தால், வினோத்ராஜ் மாதிரி இன்னும் 2 இயக்குநர்களை அறிமுகப்படுத்துவேன் என்றார் சிவகார்த்திகேயன்.

படம் தயாரித்தால் அதிலிருந்து சம்பாதிக்க வேண்டும். ஆனால், நான் சம்பாதிக்க எனக்கு நடிகன் என ரசிகர்கள் ஒரு அங்கீகாரம் கொடுத்துள்ளனர். நன் சின்சியராக நடித்தால் அதிலிருந்து சம்பாதித்துக் கொள்வேன். ஆனால், அப்படி சம்பாதித்து சினிமாவில் எதாவது செய்ய வேண்டும் என ஆசை. அதேபோல், சினிமாவில் யாருக்கும் வாய்ப்பு கொடுப்பதால், நான் தான் வாழ்க்கை கொடுத்தேன், நான் தான் ரெடி பண்ணேன் என எதுவும் சொல்லமாட்டேன். ஏனென்றால் என்னையும் அப்படி சொல்லி சொல்லி பழக்கிவிட்டாங்க. ஆனால் அந்த மாதிரியெல்லாம் நான் கிடையாது. இது ஒரு நண்பரை அறிமுகப்படுத்தும் விதமான செயல் தான் என சிவகார்த்திகேயன் பேசினார். 

மேலும் படிக்க - கொட்டுக்காளி படத்துக்காக நிர்வாணமாக ஆட ரெடி

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், தனுஷை மறைமுகமாக அட்டாக் செய்துள்ளாரா சிவகார்த்திகேயன் என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அதாவது சிவகார்த்திகேயனின் ஆரம்ப காலங்களில் தனுஷ் தான் அவருக்கு உதவி செய்ததாகவும், ஆனால் சிவாவோ நன்றி இல்லாமல் நடந்துகொண்டதாகவும் அப்போது பேச்சுகள் அடிபட்டன. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக சிவா இப்படி பேசினாரா, அல்லது எதார்த்தமாக தான் அப்படி கூறினாரா என ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow