Jayam Ravi Divorce : பிறந்த நாளில் மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரினார் ஜெயம் ரவி.. கோர்ட்டில் மனுத் தாக்கல்
Actor Jayam Ravi Filed Divorce Petition on Wife Aarthi : மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகர் ஜெயம் ரவி மனுத் தாக்கல் செய்துள்ளார். ஜெயம் ரவியின் மனு அக்டோபர் 10ஆம் தேதி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
Actor Jayam Ravi Filed Divorce Petition on Wife Aarthi : மனைவி ஆர்த்தி உடனான பிரிவை அறிவித்த மறுநாளே விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் நடிகர் ஜெயம் ரவி(Jayam Ravi). தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் 2009 ஆண்டு பதிவு செய்த எங்கள் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ளார். இந்த வழக்கு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
எடிட்டர் மோகனின் 2வது மகன் ரவி. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானதால் ஜெயம் ரவி(Jayam Ravi) என்பதே பெயராகி போனது. அழகான கதாநாயகனாக சாக்லேட் பாய் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார் ஜெயம் ரவி. தனி ஒருவன் திரைப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
சினிமா மற்றும் சீரியல் தயாரிப்பாளரான சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை ஜெயம் ரவி(Aarthi Jayam Ravi) காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஜெயம் ரவி. கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் ஜெயம் ரவி ஆர்த்தி தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகும் பலரும் பொறாமைப்படும் வகையில் வாழ்க்கை நடத்திய இந்த தம்பதியர் கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கிசுகிசு பரவியது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகுதான் விரிசல் அதிகமானது.
இந்த நிலையில் தனது திருமண வாழ்க்கையில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார் ஜெயம் ரவி(Jayam Ravi Divorce). “வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம், ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும். திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரை துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடக துறை மற்றும் சமுக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.
நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி(Aarthi Ravi) உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த முடிவு எனது சொந்த முடிவாகும். இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே.’நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே(Jayam Ravi) இருக்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன், எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி,”என்று தெரிவித்திருந்தார் ஜெயம் ரவி.
ஜெயம் ரவி(Jayam Ravi 44th Birthday) இன்றைய தினம் தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மண முறிவு அறிவிப்புக்குப் பிறகு ஜெயம் ரவி இன்று தனது வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவினை எடுத்துள்ளார். கடந்த 15 ஆண்டு காலமாக மனைவியுடன் பிறந்தநாளினை கொண்டாடிய ஜெயம் ரவி,இன்று மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் 2009 ஆண்டு பதிவு செய்த எங்கள் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ளார். இந்த வழக்கு அக்டோபர் மாதம் 10 தேதி சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.இந்த பிறந்தநாளை ஜெயம் ரவியால் மறக்கவே முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?