Accident : 5% குறைந்த சாலை விபத்துகள்... தமிழக காவல்துறை தகவல்!

Tamil Nadu Accident : கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு 5 சதவீதம் விபத்துகள் குறைந்துள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

Sep 30, 2024 - 09:01
Sep 30, 2024 - 15:30
 0
Accident : 5% குறைந்த சாலை விபத்துகள்... தமிழக காவல்துறை தகவல்!
5% குறைந்த சாலை விபத்துகள்... தமிழக காவல்துறை தகவல்!

Tamil Nadu Accident : சாலை விபத்துகளை தடுக்கவும் உயிர்களைக் காக்கவும் சாலை பாதுகாப்பு தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சாலை விபத்துகளை தடுப்பதற்கு சாலை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு குறிப்பாக சாலை விதிகளை மீறுபவர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் எதிர் திசையில் வாகனம் ஓட்டுபவர்கள் ஆகியோரை கண்காணிப்பதற்காக 24 மணி நேரமும் தேசிய நெடுஞ்சாலைகளில் ரோந்து பணி  போக்குவரத்து காவலர் மூலம் கண்காணிக்கப்படுகிறது. சாலை  விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர்களுக்கு அபராதம் செலான் மூலம் வழங்கப்படுகிறது.

சாலை விபத்துகள் அதிகம் ஏற்படும் இடங்களை பகுப்பாய்வு செய்தல் மற்றும் அங்கு உள்ள குறைபாடுகளை சரி செய்தல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொண்டதன் காரணமாக மாநிலத்தில்  அதிக சாலை விபத்துக்கள் தடுக்க அவை உதவியாக தமிழக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் 10066 அபாயகரமான விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், இதில் 10536 உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் வரை 10589 அபாயகரமான விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளன 11,106 பேர் உயிரிழந்தனர். சாலை விதிகள் கடைபிடிக்கப்படுவது குறித்து போக்குவரத்து காவல்துறையினரின் தீவிர  கண்காணிப்பின் காரணமாக கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 523 சாலை விபத்து வழக்குகள் குறைக்கப்பட்டுள்ளது, அதாவது 5 சதவீதம் வழக்குகள் குறைந்துள்ளது. 5 சதவீதம் உயிரிழப்புகள்  என்பது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது  570 உயிர்கள் சாலை விபத்துக்கள் பலியாவது  தடுக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்துகளை தடுப்பதற்கு போக்குவரத்து காவல்துறையினர் சில முக்கிய நடவடிக்கைகள் இன்றியமையாதவை. குறிப்பாக ஜூலை 2024 வரை அதிவேகத்தில் வாகனம் ஓட்டுபவர்கள், சிவப்பு விளக்கை தாண்டி செல்பவர்கள், வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துபவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், அதிக சுமை ஏற்றி கொண்டு சென்ற சரக்கு வாகனங்கள், சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனங்கள் என 6 பிரிவுகளின் 6 லட்சத்து 66 ஆயிரத்து 721 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 

அதிவேகத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது 1,05,097 வழக்குகளும், சிக்னலில் சிவப்பு விளக்கை தாண்டி சென்றவர்கள் என 1 லட்சத்து 35 ஆயிரத்து 771 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துபவர்கள் மீது 2 லட்சத்து 31,624 வழக்குகள், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது 13,270 வழக்குகள், அதிக சுமை ஏற்றி சரக்கு வாகனங்களுக்கு 6946 வழக்குகள், சரக்குகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது பயணிகளை ஏற்றி சென்றது குறித்தான 74 ஆயிரத்து 13 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 6 லட்சத்து 66 ஆயிரத்து 721 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. 

மேலும் இரண்டு முக்கிய பிரிவுகளான இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணியாதவர்கள் காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணியாதவர்கள் மீது 39 லட்சத்து 18 ஆயிரத்து 197 வழக்குகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொள்ளும் பொழுது தலைக்கவசம் அணியாமல் சென்றவர்கள் மீதான 35 லட்சத்து 78 ஆயிரத்து 763 வழக்குகள் (3578763 வழக்குகள்) போடப்பட்டுள்ளது. காரில் பயணம் செய்யும் பொழுது சீட் பெல்ட் அணியாமல் காரை ஓட்டியவர்கள் 3 லட்சத்து 39 ஆயிரத்து 434 வழக்குகள்(3,39,434 வழக்குகள்) போடப்பட்டுள்ளது, மொத்தமாக 39 லட்சத்து 18,197 வழக்குகள் (3918197 வழக்குகள்)  இரண்டு பிரிவுகளின் கீழ் போடப்பட்டுள்ளது.

இந்த வருடம் ஜூலை மாதத்தோடு மோட்டார் வாகன சட்டத்தை  மீறியதற்காக மொத்தம் 76 லட்சத்து 15 ஆயிரத்து 713 வழக்குகள் (7615713 வழக்குகள்) பதிவு செய்யப்பட்டுள்ளன வாகன விதிகளை மீறிய 1 லட்சத்து 82375 நபர்களின் (182375 நபர்கள்) ஓட்டுனர் உரிமங்கள் ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ள. மேலும் 39 ஆயிரத்து 924 ஓட்டுநர் உரிமங்கள் (39924 நபர்கள்) இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து காவல்துறையால் மேற்கொள்ளப்படும் ரோந்து வாகனங்கள் மூலம் பல முக்கிய விபத்துக்கள் அதிகளவில் தடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மொத்தமாக 218 ரோந்து வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் சில முக்கிய பகுதிகளை உள்ளடக்கி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.

ரோந்து வாகனங்களின் முக்கிய பணி என்பது சாலை விபத்துகளை குறைப்பது சாலை விபத்துகளில் பொன்னான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உயிரை காப்பாற்றுவதும் ஆகும். இந்த ரோந்து  வாகனங்கள் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு காவல்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்படுகின்றன. 2024 ஜூலை மாதம் வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் தலைநகரங்களில் உள்ள நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் சாலை விபத்துகளில் படுகாயம் அடைந்த 20089 நபர்களை மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக பொன்னான மணி நேரத்திற்குள் அனுப்பி விலைமதிப்பற்ற உயிரை காப்பாற்றியுள்ளனர் மொத்தத்தில் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்ட 14,957 பேருக்கு உதவியுள்ளன.

மேலும் படிக்க: பூமிக்கு 2 நிலவுகள்... விஞ்ஞானிகள் தெரிவித்த அதிர்ச்சி தகவல்!
 
போக்குவரத்து துறை காவல் துறையினரால் பொதுமக்களிடையே விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன குறிப்பாக சாலை விபத்துக்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் பேருந்து ஓட்டுனர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்டவர்களிடையே 2024 ஆம் ஆண்டு கடந்த ஜூலை மாதம் வரை சுமார் 44 ஆயிரத்து 48 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது இதில் 19 லட்சத்து 31,2025 பேருக்கு சாலை விழிப்புணர்வு குறித்தான பிரச்சாரங்கள் செய்யப்பட்டுள்ளது என்ற புள்ளி விவரங்களை தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow