கரூர் துயரச் சம்பவம்: கூட்ட நெரிசல் நடந்த இடத்தில் துப்புரவுப் பணிகள் நிறைவு; வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வணிகர்கள் நிவாரணம் கோரிக்கை!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரம் பகுதியில் 10 நாட்களுக்குப் பின் துப்புரவுப் பணிகள் இன்று நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து, 12 நாட்களாகப் பூட்டப்பட்டிருந்த கடைகள் திறக்கப்பட்டன.