06 PM Speed News Update | இன்றைய விரைவுச் செய்திகள் | 05-11-2024
06 PM Speed News Update | இன்றைய விரைவுச் செய்திகள் | 05-11-2024
06 PM Speed News Update | இன்றைய விரைவுச் செய்திகள் | 05-11-2024
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (நவ. 05) 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வரும் 7, 8, 9 ஆகிய தேதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
பொது நன்மை எனக்கூறி மாநில அரசுகள் அனைத்து தனியார் சொத்துக்களையும் கையகப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 8க்கு ஒன்று என்ற பெரும்பான்மை நீதிபதிகளின் உத்தரவு என்ற அடிப்படையில் உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று (நவ. 03) 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி.
ஆம்பூரில் உள்ள உணவகத்தில் பிரியாணி இலையில் புழு இருந்ததால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் உரிமையாளரிடம் வாக்குவாதத்தால் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் குவிந்தனர். இதன் காரணமாக இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று (நவ. 02) 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடையும் பட்சத்தில், நவம்பர் 2வது வாரத்தில் தமிழகத்தில் மிக கனமழை பொழிய வாய்ப்பு.