K U M U D A M   N E W S

11 தமிழக மீனவர்களுக்கு 2 ஆண்டு சிறை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 11 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை

Maternity Benefit Scheme | மகப்பேறு உதவித்தொகை திட்டத்தில் முறைகேடு புகார்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கடியாப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தணிக்கை அதிகாரிகள் ஆய்வு.

ஈ.டி. ரெய்டால் பரபரப்பான சென்னை.. சட்டவிரோத பண பரிவர்த்தனை புகாரால் அதிரடி

தமிழகத்தில் சென்னை மற்றும் சில மாவட்டங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.

பெண்களை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளை - புதுக்கோட்டையில் அதிர்ச்சி

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மாமியார், மருகளை கட்டிப்போட்டு 50 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் நேற்றிரவு கனமழை வெளுத்து வாங்கியது.

உஷார் மக்களே.. 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சவுக்கு சங்கர் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

ஜாமின் நிபந்தனைகளைத் தளர்த்தக்கோரி சவுக்கு சங்கர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், சென்னை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தவறாமல் ஆஜராகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொகுதி மக்களை நேரில் சந்திக்க முடியாது.. பகீர் கிளப்பிய துரை வைகோ!

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட எம்பி துரை வைகோ, நேரில் உங்களை சந்திக்க முடியாது, கோரிக்கைகளை மனுவாக அலுவலகத்தில் கொடுத்து விடுங்கள், அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என பேசிய கருத்தை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட கருப்பையா வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயில் திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு சென்ற போது நேர்ந்த சோகம்...

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பெரியசாமிபுரம் கடற்கரையில் குடும்பத்துடன் குளித்த 5 பெண்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டனர். அவர்களில் 3 பேர் மீட்கப்பட்ட நிலையில் 2 பேர் உயிரிழந்தனர்.

நீதிபதிகள் குறித்து சர்ச்சை கருத்து... R.S. பாரதிக்கு எதிரான மனு தள்ளுபடி... உயர்நீதிமன்றம் அதிரடி!

நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.