K U M U D A M   N E W S

கோவைப் பெரிய கடை வீதியில் நடுரோட்டில் தள்ளுவண்டி கடை: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி!

கோவைப் பெரிய கடை வீதியில், சாலையின் நடுவே தள்ளுவண்டிக் கடை ஆக்கிரமிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 'நோ பார்க்கிங்' விதிமீறலுக்கு அபராதம் விதிக்கும் காவல்துறை, சாலையை மறித்துக் கடை அமைப்பவருக்கு மட்டும் எப்படி அனுமதி எனக் பொதுமக்கள் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்துள்ளனர்.

பொதுமக்கள் கவனத்திற்கு..திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் - போக்குவரத்து மாற்றம்!

செப்டம்பர் 22 அன்று சென்னையில் நடைபெறும் திருப்பதி திருக்குடைகள் ஊர்வலத்தையொட்டி, பல்வேறு சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

வடபழனி முருகன் கோவில் வழக்கு: பக்தரின் மனுமீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை வடபழனி முருகன் கோவிலின் வாகன நிறுத்துமிடங்களில் திருமண மண்டபம் மற்றும் பணியாளர் குடியிருப்புகள் கட்டுவதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.