அஜித் – பிரசாந்த் நீல் கூட்டணி இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை இன்று தொடங்கியுள்ளார் பிரசாந்த் நீல்.
பார் கவுன்சில் தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு இருக்கலாமோ என்ற கோணத்தில் பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர் மழை காரணமாக பிரபல ஊட்டி மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோலிவுட்டின் முன்னணி நடிகரான தளபதி விஜய், விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ளார். அதன்படி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள விஜய், அதன் முதல் அரசியல் மாநாடு எங்கு நடைபெறும் என்பது குறித்தும் முக்கியமான முடிவெடுத்துள்ளாராம்.
“100% கவர்ச்சியான வேடங்களில் நான் நடிக்கவே மாட்டேன்” என நடிகை நமிதா ஆணித்தனமாகக் கூறியுள்ளார்.
வடமாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் என இருப்பிடத்தை அடிக்கடி மாற்றி வருவதால் ரவுடி சம்போ செந்திலை பிடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அவரை தேடி தனிப்படை போலீசார் மும்பையில் முகாமிட்டுள்ளனர்.
சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச்சட்ட வழக்கில், குற்றச்சாட்டு பதிவுக்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நாளை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வேலூர் சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரனை விசாரிக்க போலீஸ் திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதான வழக்கறிஞர் அருள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.