K U M U D A M   N E W S

பட்டாசு குடோனில் வெடி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

Vetrimaaran: தமிழ் சினிமாவின் தனித்துவம்... திரைமொழியின் அசுரன்... வெற்றிமாறனின் வெற்றிப் பயணம்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன், இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இதுவரை 7 படங்கள் இயக்கியுள்ள வெற்றிமாறன், 4 தேசிய விருதுகளை வென்று அசத்தியுள்ளார். திரை மொழியின் அசுரனான வெற்றிமாறனின் வெற்றிப் பயணம் குறித்து இப்போது பார்க்கலாம்.

அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை அண்ணா பல்கலை கழகத்திற்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அது புரளி என தெரிய வந்தது

Sarathkumar: ஹேமா கமிட்டி... கேரவனில் கேமரா... பிக் பாஸ் நடிகை யார்..? ரவுண்டு கட்டிய சரத்குமார்!

மலையாள திரையுலகில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவங்கள் குறித்து வெளியான ஹேமா கமிட்டியின் அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்து பேசிய நடிகர் சரத்குமார், கேரவனில் கேமரா இருந்தது பற்றிய ராதிகாவின் குற்றச்சாட்டுக்கும் விளக்கம் கொடுத்துள்ளார்.

மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் வாழ்த்து

பாராலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்ற இளைஞர்.. தவறி விழுந்ததில் கையில் மாவுக்கட்டு

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வேன் ஓட்டுநர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்ற போது தவறி கீழே விழுந்ததில் கையில் முறிவு ஏற்பட்டுள்ளது.

TNPSC குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் - வெளியானது முக்கிய தகவல்

TNPSC குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை... புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி... வானிலை மையம் எச்சரிக்கை!

கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், சென்னை உட்பட தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியுள்ளது.

எலி மருந்து அருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட பெண் காவலர்.. மன அழுத்தத்தால் விபரீதம்

கடன் பிரச்சனை காரணமாக மன அழுத்தத்தால் எலி மருந்து அருந்திய பெண் காவலர் கடந்த 28ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை | Kumudam News 24x7

பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை வழங்கும் மசோதா மேற்குவங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.