K U M U D A M   N E W S

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. 26 பேர் ஆஜர்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குண்டர் சட்டம் பாய்ந்து சிறையில் உள்ள 26 பேரையும் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

TVK Vijay: தவெக புதுச்சேரி நிர்வாகி திடீர் மறைவு... கலங்கிய புஸ்ஸி ஆனந்த்... ஆறுதல் சொன்ன விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் பாண்டிச்சேரி மாநில செயலாளர் சரவணன் மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் விஜய் போனில் ஆறுதல் கூறினார்.

4 பல்கலை. மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

குரூப் 1 தேர்வில் தமிழ்வழி கல்வியில் பயின்றதாக போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் அண்ணாமலை பல்கலை., உள்பட 4 பல்கலைக் கழகங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்த்து நீதிபதி உத்தரவிட்டார்.

சுற்றுலா பயணி - ஆட்டோ ஓட்டுநர் இடையே ஏற்பட்ட மோதல்.. வெளியான பகீர் சிசிடிவி காட்சி

நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையத்தில் சுற்றுலா பயணி - ஆட்டோ ஓட்டுநர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

விஜய்யை பார்த்து சீமானுக்கு பயம்... அதை வெளிய காட்டிக்கல! - வெற்றிக்குமரன்

நடிகர் விஜய்யைப் பார்த்து, சீமான் பயங்கரமாக பயப்படுகிறார். ஆனால், அதனை அவர் வெளிகாட்டிக் கொள்ளமாட்டார் என நாம் தமிழர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட வெற்றிக் குமரன் தெரிவித்துள்ளார்.

வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர்.. சேலத்தில் மக்கள் அவதி

சேலம் மேட்டூர் அருகே தூக்கனாம்பட்டி பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அத்தியாவசிய பொருட்கள் நீரில் மூழ்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

கொட்டித் தீர்த்த கனமழை.. ஜவ்வாதுமலையில் நிலச்சரிவு.. போக்குவரத்து பாதிப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை, புதூர்நாடு பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இன்றைக்கு மழை பெய்யுமா? சென்னை வானிலை மையம் கொடுத்த தகவல்!

தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக்.22) 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அனுமதியின்றி பள்ளி சுவற்றில் ஒட்டப்பட்ட தவெக போஸ்டர்.. பள்ளி நிர்வாகம் அதிரடி புகார்.. காவல்துறை அதிரடி நடவடிக்கை

தவெக மாநாடு நடைபெறுவதையொட்டி விளம்பரம் செய்யும் வகையில் அக்கட்சியினர் குடியாத்தம் அரசு பள்ளி சுவற்றில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டினர். இதையடுத்து பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் போஸ்டர்களை அகற்றி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Thalapathy 70: கமல் – அட்லீ கூட்டணியில் தளபதி விஜய்... இப்படியொரு சம்பவத்த யாருமே எதிர்பார்க்கலல?

அட்லீயின் புதிய படத்தில் கமல்ஹாசன், சல்மான்கான் நடிக்கவுள்ளதாக சொல்லப்படும் நிலையில், தளபதி விஜய்யும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.