K U M U D A M   N E W S

#BREAKING : காங்கிரஸ் பிரமுகர் மர்ம மரணம் - 3 பேரிடம் விசாரணை

நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் 3 பெண்களிடம் சிபிசிஐடி விசாரணை. ஜெயக்குமார் கடந்த மே மாதம் 4ம் தேதி அவரது வீட்டின் பின்புறம் உடல் - பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து. நீடித்த ஆரோக்கியம், நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துவதாக முதலமைச்சர் தனது X தளத்தில் பதிவு

"இனி இந்த சம்பவம் நடக்கவே கூடாது.."த.வெ.க சார்பில் இறங்கி அடிக்கும் ஆனந்த்..

"இனி இந்த சம்பவம் நடக்கவே கூடாது.." தவெக சார்பில் இறங்கி அடிக்கும் ஆனந்த்..

#JUSTIN || காதல் திருமணம் - காவல் நிலையம் வாசலில் பயங்கர மோதல்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த ஜோடி காவல்நிலையத்தில் தஞ்சம். தாக்குதலில் ஈடுபட்ட இருவீட்டாரைச் சேர்ந்த 17 பேர் மீது சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு.

நடிகையை துன்புறுத்திய வழக்கு.. 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்

TPS நடிகையை துன்புறுத்திய வழக்கில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்.

இந்தியாவின் No:1 தீவிரவாதி ராகுல் காந்தி.., மத்திய இணை அமைச்சர் சர்ச்சை பேச்சு

இந்தியாவின் நம்பர் 1 தீவிரவாதி ராகுல் காந்தி என மத்திய இணை அமைச்சர் ரவ்நீத்சிங் பிட்டு விமர்சனம் செய்துள்ளார்.

சிறைத்துறை காவலர்கள் இன்று ஆஜர்

ஜெயிலர் அருள்குமரன், டிஐஜியின் பாதுகாப்பு காவலர் ராஜூ, சிறைக்காவலர்கள் பிரசாந்த், விஜி ஆஜராகின்றனர்.

பாமகவை கொச்சைப்படுத்த வேண்டாம்.. திருமாவளவன் நிறுத்தி கொள்ள வேண்டும்.. அன்புமணி

பாமகவை சாதி கட்சி என்பது போன்று பேசுவதை திருமாவளவன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பாமகவை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கல்யாண ராணி சத்யா வெளியே.. மூளையாக செயல்பட்ட தோழி சிறைக்கு உள்ளே..

தாராபுரத்தில் வாலிபரை திருமணம் செய்து பண மோசடி செய்த பெண் கல்யாண ராணி சத்யாவிற்கு மூளையாக செயல்பட்ட, தமிழ்ச்செல்வியை தாராபுரம் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

நாங்கள் எல்.கே.ஜி. தான்.. மக்கள் புரிந்துகொண்டால் போதும் - அன்புமணிக்கு திருமாவளவன் பதில்

நாங்கள் எல்கேஜி படித்திருந்தாலும், சமூக பொறுப்புடன் நடந்து கொள்கிறோம் என்பதை மக்கள் புரிந்து கொண்டால் போதும் என்று அன்புமணி ராமதாஸ் விமர்சனத்திற்கு திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.