விடாமல் வெளுத்த கனமழை.. சட்டென சரிந்த கட்டிடம் - எகிறும் பலி எண்ணிக்கை - அதிர்ச்சி ரிப்போர்ட்!!
கனமழையால் பெங்களூரு கட்டிடம் இடிந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு.
கனமழையால் பெங்களூரு கட்டிடம் இடிந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 28 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வருகிறது.
ஈரோடு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியது.
நீர்வரத்து அதிகரிப்பால் மிருகண்டா அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கோவை மற்றும் திருப்பூரில் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயலாக வலுபெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சேலம் மேட்டூர் அருகே தூக்கனாம்பட்டி பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அத்தியாவசிய பொருட்கள் நீரில் மூழ்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை, புதூர்நாடு பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
பெங்களூருவில் கொட்டித் தீர்த்த கனமழையால் இருசக்கர வாகனங்கள், கார்கள் மழைநீரில் மூழ்கின. குடியிருப்புகள், சாலைகள் என அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் எலிவால் அருவி, பாம்பார்புரம் அருவி, வட்டக்கானல் அருவி, பேரி பால்ஸ் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.