K U M U D A M   N E W S

தமிழகம் முழுவதும்... விஜய்யின் அடுத்த பிளான்... நாளை அவசர ஆலோசனை

சென்னை பனையூரில் உள்ள தவெக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் விஜய் தலைமையில் நாளை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. 234 தொகுதிகளிலும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது.

திடீரென வெடித்த டயர்.. 25 பேர் நிலை? காஞ்சிபுரத்தில் பயங்கரம்

காஞ்சிபுரம் கூத்திரமேடு பகுதியில் டாடா ஏஸ் வாகனத்தின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பதவி பித்துப் பிடித்த தலித் அமைப்புகள்.. அரசியல் பசிக்கு இரையாகி விட்டோம்.. கிருஷ்ணசாமி

அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டு முன்னுரிமை அரசாணையை ரத்துசெய்ய வலியுறுத்தி, ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெறவுள்ளதாக டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

வீட்டு வேலை செய்த சிறுமி உயிரிழந்த விவகாரம்... போலீசார் அதிரடி நடவடிக்கை

சென்னை அமைந்தகரையில் வீட்டில் வேலை செய்த 16 வயது சிறுமி அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பதியில் குவிந்த பக்தர்கள்.. இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் வரை காத்திருக்கும் பக்தர்கள்....

தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் குவிந்தனர். இதன் காரணமாக இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருத்தணியில் கொட்டித் தீர்த்த கனமழையால் மாட வீதியில் குளம்போல் தேங்கிய மழைநீர்.. பக்தர்கள் கடும் அவதி

திருத்தணியில் கொட்டித் தீர்த்த கனமழையால் மாட வீதியில் குளம்போல் மழை நீர் தேங்கியது. இதனால், கோயிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

புதுச்சேரியில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்..

புதுச்சேரி ரேஷன் கடைகளில் அரசு அறிவித்தபடி தீபாவளி மானிய பொருட்கள் வழங்கக்கோரி அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி வந்த பயணிக்கு குரங்கம்மை அறிகுறி..

சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு குரங்கம்மை அறிகுறி தென்பட்டதால் அவர் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

விஜய் யாரோ எழுதிய வசனத்தை பேசியவர்; அரசியல் அறிவு கிடையாது - நல்லசாமி அதிரடி

யாரோ எழுதிய வசனத்தையும், பாடலையும் பாடி, வசனம் பேசியவர் விஜய் என்றும் அவருக்கு அரசியல் அறிவு கிடையாது என்றும் தமிழ்நாடு 'கள்' இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.

உடலில் ரத்தக் காயங்கள்.. பாத்ரூமில் இறந்து கிடந்த சிறுமி.. வீட்டு உரிமையாளர் கைது

16 வயது சிறுமி அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, வீட்டின் உரிமையாளர் முகமது நவாஸ், அவரது மனைவி உட்பட 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.