K U M U D A M   N E W S
Kumudam Ad

Protest

போராட்டத்தை கைவிடாவிட்டால் நடவடிக்கை - சாம்சங் நிறுவனம் எச்சரிக்கை

ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி சாம்சங் தொழிலாளர்கள் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போராட்டத்தை கைவிடாவிட்டால் வரும் திங்கள்கிழமை தொழிலாளர்களின் அடையாள அட்டை முடக்கப்படும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஒருவழியாக மமதாவின் வேண்டுகோளை ஏற்ற மருத்துவர்கள்.. 41 நாட்கள் நடந்த போராட்டம் வாபஸ்!

போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை சந்தித்து மமதா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மருத்துவர்கள் அவரிடம் , கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் குமார் கோயலை பதவி நீக்கம் செய்ய வேண்டும்; சுகாதார செயலாளரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.

பந்த் எதிரொலியால் பேருந்துகள் நிறுத்தம்.. பயணிகள் அவதி

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி சார்பில் முழு கடையடைப்பு நடைபெறுவதால் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

#JUSTIN || ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் மறியல்

பெரம்பலூரில் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் சாலை மறியல்.

மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் மோதல்.. புதுச்சேரியில் உச்சக்கட்ட பரபரப்பு | Kumudam News 24x7

சதுப்பு நில காடுகளை அழித்து பாண்டி மெரினா விரிவாக்கம்- எதிர்ப்பு தெரிவித்து நடந்த சாலை மறியல் போராட்டத்தில் மோதல்

’பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு’.. திமுக அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

''ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதை அனைவரும் அறிவோம்'' என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சுரங்கப்பாதை அமைக்க கோரி மக்கள் சாலை மறியல் போராட்டம்

பட்டுக்கோட்டையில் ரயில்வே கேட் பகுதியில் சுங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி 1,000க்கும் மேற்பட்ட மக்கள் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர்.

Samsung Employees Protest : சாம்சங் ஊழியர்கள் 3-வது நாளாக போராட்டம்!

Samsung Employees Protest :ஊதிய உயர்வு, போனஸ் போன்ற பண பலன்கள் வழங்காததை கண்டித்து சாம்சங் ஊழியர்கள் போராட்டம்.

மருத்துவ மாணவி படுகொலை; மருத்துவர்கள் தொடர் போராட்டம்!

கொல்கத்தாவில் மருத்துவ மாணவி படுகொலையை கண்டித்து மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆசிரியர்கள் போராட்டம் - தமிழக அரசு விளக்கம்

தமிழ்நாடு முழுவதும் தொடக்க கல்வி ஆசிரியர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், தொடக்க கல்வித்துறை கூட்டு நடவடிக்கை குழு நடத்திய ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக 30% பேர் மட்டுமே விடுமுறை எடுத்துள்ளனர். 69.4% ஆசிரியர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்ததாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.