K U M U D A M   N E W S

கரூர் விவகாரம்: விஜய் தவறு செய்திருந்தால் நடவடிக்கை உறுதி - சபாநாயகர் அப்பாவு கடுமையான விமர்சனம்!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விஜய்யின் காலதாமதமே விபத்துக்குக் காரணம் என்று சபாநாயகர் அப்பாவு காட்டமாகக் குற்றம் சாட்டிய நிலையில், இந்த விவகாரத்தில் விஜய் தவறு செய்திருந்தால் அரசு நடவடிக்கை எடுப்பது உறுதி என்றும் எச்சரித்தார்.

கரூர் சோகத்துக்கு தவெக நிர்வாகிகள் குளறுபடியே காரணம் - வைகோ குற்றச்சாட்டு!

கரூரில் விஜய் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு, தவெக நிர்வாகிகளின் முறையற்ற திட்டமிடலே காரணம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாகச் சாடினார். உயிரிழப்பு குறித்து வேதனை தெரிவித்த அவர், அரசு மற்றும் போலீசார் எடுத்த நடவடிக்கைகள் சரியே என்றார்.

விளம்பர மோகம் தலைக்கேறிய விடியா அரசு வீழும் காலம் நெருங்கிவிட்டது - நயினார் நாகேந்திரன்!

சத்துணவுத் திட்டச் சீர்கேடுகளை மறைக்கவும், நிர்வாகத் தோல்விகளை மூடிமறைக்கவும் திமுக அரசு மக்கள் வரிப்பணத்தில் விளம்பர மோகத்துடன் பிரம்மாண்ட விழாக்களை நடத்துவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

திமுக அரசின் துரோகம் - மக்கள் நலத் திட்டங்களுக்கு அனுமதி மறுப்பதாக வானதி சீனிவாசன் சாடல்!

கோவை மாவட்டத்தில் அரசு நலத் திட்டங்களைச் செயல்படுத்த அனுமதி மறுப்பதாக திமுக அரசின் மீது பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டினார்.

பிங்க் பெயிண்ட் அடித்தால் பிங்க் பஸ் ஆகிவிடாது - தி.மு.க-வை சாடிய வானதி சீனிவாசன்!

பிங்க் பெயிண்ட் அடித்தால் பிங்க் பஸ் ஆகிவிடாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு வானதி ஸ்ரீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்

சங்கிகளின் கூடாரம் மகிழ்ச்சியடைய எடப்பாடி பேசுகிறார்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

”வரலாறு தெரியாமல் இப்போது சேர்ந்திருக்கும் சங்கிகள் வைக்கின்ற கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையிலிருந்து விடுபட வேண்டும் என்கிற பாஜகவுக்கு ஊதுகுழலாக இருந்து கோயம்புத்தூரில் நடைபெற்ற பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி பேசியது கண்டிக்கத்தக்கது” என அமைச்சர் சேகர்பாபு காட்டமாக தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு ஆதரவு கரம் நீட்டிய சீமான்- தவெக தொண்டர்கள் வரவேற்பு

’தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய தவெக பெண் பொறுப்பாளர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை கொடுந்தாக்குதல் தொடுத்திருப்பது எதேச்சதிகாரத்தின் உச்சம்’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஆடை கிழிப்பது.. பூட்ஸ் காலால் உதைப்பது.. இது மக்களாட்சியா? விஜய் கண்டனம்

’தற்போது தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல, அதிகாரத் திமிர் பிடித்த உண்மையான பாசிச ஆட்சியே’ என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் திமுக தலைமையிலான அரசை கடுமையாக சாடியுள்ளார்.