K U M U D A M   N E W S

சென்னையில் சோகம்: வீட்டு உரிமையாளர் இறுதிச் சடங்கின்போது மின்சாரம் தாக்கி ஆந்திரத் தொழிலாளி உயிரிழப்பு!

சென்னை முகப்பேரில், வீட்டு உரிமையாளர் இறுதிச் சடங்கின்போது, மின்சார இணைப்புப் பணியில் இருந்த ஆந்திர மாநிலத் தொழிலாளி நாராயணன் (40), மதுபோதையில் மின்சார ஜங்ஷன் பாக்சை தொட்டதால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மாதாந்திர மாமூல் கேட்டு அட்டகாசம்; நிறைமாத கர்ப்பிணியின் காதை வெட்டிய கும்பல்!

மாதந்தோறும் மாமூல் தர வேண்டும் எனக் கூறி, மளிகைக் கடை உரிமையாளரைத் தாக்கிய கும்பல், அதைத் தடுக்க வந்த நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவியின் காதை வெட்டிய சம்பவம் சென்னை முகப்பேரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலை நடத்திய கும்பல், மற்றொரு வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசிவிட்டுத் தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.