அய்யகோ.. மீண்டுமா? வால்பாறையில் சிறுத்தை தாக்கி 8 வயது சிறுவன் பலி!
வால்பாறை பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுவனை சிறுத்தை கவ்விச் சென்றுள்ளது. வனத்துறையினரின் தேடுதலில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.