பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று முதன்முறையாக வென்று சாதனைப் படைத்துள்ளது வங்கதேசம் அணி.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து எஸ்.பி. கண்ணன் ஆய்வு.
அருப்புக்கோட்டையில் பெண் DSP மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்.
பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை வழங்கும் மசோதா மேற்குவங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள டீன் பணியிடங்களை விரைவாக நிரப்ப உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.
வியட்நாமை சேர்ந்த 80 வயதான தாய் நாகோக் என்பவர் கடந்த 60 ஆண்டுகளில் ஒரு நிமிடம் கூட தூங்கியது இல்லையாம். கடந்த 1962ம் ஆண்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவருக்கு அதன்பிறகு தூக்கம் என்பதே முற்றிலுமாக பறந்துபோய் விட்டதாம்.
தமிழ்நாட்டில் குரங்கம்மை அச்சுறுத்தல் இருப்பதால் திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
திருவொற்றியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் உதயநிதி வழங்கினார்.
வடிவேலு தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கில் இரண்டு வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய சிங்கமுத்துவுக்கு அவகாசம் வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்