தவெக முதல் மாநில மாநாடு... தொடங்கிய கலந்தாய்வு கூட்டம்
சேலம் மாவட்டம் ஆத்தூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கலந்தாய்வுக் கூட்டம் தொடங்கியது. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையிலான கூட்டத்தில் அரசியல் திறனாய்வாளர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கலந்தாய்வுக் கூட்டம் தொடங்கியது. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையிலான கூட்டத்தில் அரசியல் திறனாய்வாளர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகின்றனர்.
திருவள்ளூர் பெரியபாளையம் அருகே புதுப்பாளையம் - காரணி இடையேயான உயர்மட்ட மேம்பால பணிகளை துரிதப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாநில மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடுகளில் தேவையில்லாமல் திமுக அரசு மூக்கை நுழைப்பதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உரிமைகள் பறிபோகிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. கனமழையால் ஏற்பட்ட மண்சரிவை அகற்றும் பணி நிறைவடைந்ததையடுத்து ரயில் சேவை தொடங்கியது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 உயர்ந்து ரூ. 57,920க்கு இன்று (அக். 18) விற்பனை செய்யப்படுகிறது.
வடகிழக்கு பருவமழையின் முதல்கட்ட ஒரு நாள் மழைக்கே தமிழ்நாட்டின் தலைநகரத்தை தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக அரசிற்கு கடும் கண்டனம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஹமாஸ் தலைவரின் மரணம் மூலம் நீதி கிடைத்துள்ளதாக அமெரிக்க துணை குடியரசுத் தலைவர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கத்தினருடன் இன்று பேச்சுவார்த்தை
நவம்பர் மாதத்தில் தான் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல்