சென்னை மின்சார ரயில்: மதுபோதையில் ரகளை - வீடியோ வைரல்!
கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரயிலில், மது அருந்தியபடி "ஜாலி" பயணம் செய்த இரண்டு வடமாநில இளைஞர்களை ரயில்வே பாதுகாப்புப் படையினர் மடக்கிப் பிடித்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஒரு இளைஞர் கன்னத்தில் ஓங்கி அறையப்பட்டு ரயில்வே தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.