K U M U D A M   N E W S

Suresh Gopi : “சினிமா இல்லை என்றால் நான் செத்துவிடுவேன்” - சுரேஷ் கோபி பேச்சால் பரபரப்பு

Union Minister Suresh Gopi MP : அமைச்சர் பதவியா? சினிமாவா? என்று பார்த்தால் எனக்கு சினிமாதான் முக்கியம் என மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

திமுகவுடன் கூட்டணியா? – சூசகமாக சொன்ன தமிழிசை சௌந்தரராஜன்!

2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக – திமுக கூட்டணி உருவாகிறதா என்பது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

மத்திய அரசுக்கு மொய் வைக்கும் காங்., கவனம் பெறும் வித்தியாசமான கண்டன போராட்டம்

தமிழ்நாட்டுக்கு நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு 1001 ரூபாய் வழங்கும் போராட்டத்தை ஆகஸ்ட் 23ம் தேதி முதல்  நடத்த உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

டிரம்பை முந்தும் கமலா.. அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்

அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் டிரம்பை விட  கமலா ஹாரிசுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக புதிதாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது

ஜூனியர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. சீனியர்களின் மவுஸை குறைக்கும் தலைமை!

2026 தேர்தலை உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக சந்திக்க உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அமைப்பு ரீதியாக சில முக்கிய மாற்றங்களை செய்யவேண்டிய கட்டாயத்திற்கு திமுக தலைமை தள்ளப்பட்டுள்ளது.

முல்லை பெரியாறு அணை உடைந்தால் யார் பொறுப்பு?.. கேரளாவுக்கு சக்தி இல்லை.. சுரேஷ் கோபி ஆதங்கம்

முல்லை பெரியாறு அணை உடைந்தால் யார் பொறுப்பேற்பது என்றும் இன்னொரு பேரழிவை எதிர்கொள்ளும் சக்தி கேரளாவுக்கு இல்லை என்றும் நடிகரும், மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

பாலியல் தொழிலுக்கு பாதுகாப்பு கேட்ட வக்கீல்.. அதிர்ச்சி அடைந்த நீதிபதி அபராதம் விதிப்பு

இது குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி உத்தரவுக்காக வழக்கு விசாரணையை ஒத்தி வைத்திருந்தார்.

கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்... ராகுல் காந்தி, அன்புமணி, சீமான் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு வெட்டி படுகொலை செய்யட்டார். இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி, வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமான், தமிழிசை செளந்தர்ராஜன், கமல்ஹாசன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கொடநாடு வழக்கில் இன்டர்போல், கள்ளக்குறிச்சிக்கு எதுக்கு சிபிஐ? கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்

கொடநாடு கொலை,கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க இண்டர்போல் உதவியை நாட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் செய்கூலி, சேதாரமின்றி 40க்கு 40 வெற்றியை மக்கள் அளித்துள்ளனர். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ரூ.100 கோடி நில அபகரிப்பு..தலைமறைவான எம்ஆர் விஜயபாஸ்கர்..சிபிசிஐடி லுக் அவுட் நோட்டீஸ்

100 கோடி ரூபாய் நிலத்தை மோசடி செய்து அபகரித்து விட்டதாக எம்ஆர் விஜயபாஸ்கர் மீது புகார் எழுந்துள்ளதை அடுத்து அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள விஜயபாஸ்கர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் தடுக்கும் வகையில் விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.