K U M U D A M   N E W S

15க்கும் மேற்பட்ட சித்தா கிளினிக்குகளுக்கு சீல்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் மாவட்ட சித்தா மருத்துவ அலுவலர் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்ட நிலையில் 15க்கும் மேற்பட்ட சித்தா கிளினிக்குகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நோ பார்க்கிங் போர்டு - சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை

சென்னையில் அனுமதியின்றி நோ பார்க்கிங் போர்ட் வைப்பதற்கு போக்குவரத்து காவல்துறை தடை விதித்துள்ளது. மீறுவோர் மீது நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

'தல' ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வெறித்தனமாக கம்பேக் கொடுக்கும் அஜித்.. என்ன விஷயம்?

அஜித்குமார் நடிப்பு மட்டுமின்றி டிரோன்கள் தயாரிப்பு, துப்பாக்கி சுடுதல் பயிற்சி ஆகிய விஷயங்களில் தீவிர ஆர்வம் கொண்டவர். மேலும் கார்கள், பைக்குகள் என்றால் அஜித்துக்கு கொள்ளை பிரியம்.

மனைவி கழுத்து அறுத்து கருணைக் கொலை... பார்வையில்லாத கணவரின் விபரீத முடிவு!

குருந்தன்கோடு அருகே பிள்ளைகள் பராமரிக்க தவறியதால் கண் பார்வை இழந்த கணவர் நோயினால் துடித்த மனைவியின் கழுத்தறுத்து கருணை கொலை செய்து விட்டு கண் கலங்கியபடி வீட்டின் முன் அமர்ந்திருந்த பரிதாபமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

National Green Tribunal : அரசு கட்டிடங்களை ரேஸ் கிளப்புக்கு மாற்ற யோசனை

National Green Tribunal : பள்ளிக்கரணை சதுப்புநிலம், வேளச்சேரி நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பாக உள்ள அரசு கட்டிடங்களை அகற்றி அதை கிண்டி ரேஸ் கிளப்புக்கு இடமாற்றலாம் அல்லது ரேஸ் கிளப் நிலத்தை புதிய நீர்நிலையாக மாற்றலாம் என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் யோசனை தெரிவித்துள்ளது. 

School Fees Hike : முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்ட கட்டணம்.. பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்

Private School Fees Hike in Chennai : சென்னை மடிப்பாக்கத்தில், அதிக கட்டணம் வசூலிப்பதாகக் கூறி ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியை மாணவர்களின் பெற்றோர் முற்றுகையிட்டனர். இதனால் ஒருமணி நேரத்திற்கும் மேலாக சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

மீனவர்கள் சாலை மறியல்.. ஸ்தம்பித்த ECR! புதுச்சேரியில் உச்சக்கட்ட பரபரப்பு

Fishermen Protest in Pondicherry : புதுச்சேரியில் கடற்கரை ஓரம் தூண்டில் முள் வளைவு அமைக்காத்தை கண்டித்து மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னை செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Kallasarayam Issue : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்.. ஒருநபர் ஆணையத்திற்கு கால அவகாசம் நீட்டிப்பு

Kallakurichi Kallasarayam Issue : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கில் அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையத்திற்கு மேலும் 3 மாத கால நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

MUDA வழக்கு.. கைவிரிவித்த உயர்நீதிமன்றம்.. சித்தராமையா பதவிக்கு ஆபத்து?

Muda Corruption Case : ''நமது அரசியலைப்பு சட்டம் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இறுதியில் நீதியே வெல்லும். நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்?'' என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

Palani Panchamirtham Issue : பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு.. பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

Palani Panchamirtham Issue : பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக கோவையை சேர்ந்த பாஜக தொழிற்பிரிவு மாவட்ட துணைத்தலைவர் செல்வகுமார் மீது பழநி அடிவார போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.