K U M U D A M   N E W S
Kumudam Ad

நயன்தாரா திருமண ஆவணப்பட விவகாரம்.. வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பான வழக்கின் விசாரணையை ஜனவரி 22-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டார்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கு.. காவல்துறை முறையீட்டை ஏற்க மறுத்த நீதிபதி

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கும்படி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க கோரி காவல்துறை தரப்பில் முறையிடப்பட்ட நிலையில் அதனை நீதிபதி ஏற்க மறுத்துள்ளார்.

அமைச்சர் துரைமுருகன் வழக்கு – அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்ததை எதிர்த்து மனு.

பண மோசடி வழக்கு..  ராஜேந்திர பாலாஜியை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கில் மேல் விசாரணை நடத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல் துறைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை எதிர்மனுதாரராக சேர்க்கவும் உத்தரவிட்டது.

நடிகர் எஸ்.வி.சேகருக்கு சிறை தண்டனை உறுதி.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சர்ச்சை கருத்தை பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு  விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை  தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்.. அனைவரும் வெட்கப்பட வேண்டும்.. நீதிபதி வேதனை

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அனைவரும் வெட்கபட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை.. தாமாக முன் வந்து விசாரிக்கும் நீதிமன்றம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

அரசு ஊழியர்கள் சொத்து குறித்த விவரம் தனிப்பட்டது அல்ல.. நீதிமன்றம் திட்டவட்டம்

அரசு ஊழியரின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள் அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்திற்கு வெளியே இளைஞர் வெட்டி கொலை.. அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே  இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. இறுதி அறிக்கை விரைவில் தாக்கல்

அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை முடியும் நிலையில் உள்ளதாகவும், விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும் காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.