K U M U D A M   N E W S

காதலர்களை மிரட்டி கூகுள்-பே மூலம் பணம் பறித்த கும்பல்.. போலீஸார் அதிரடி நடவடிக்கை

காதலர்களை மிரட்டி கூகுள்-பே மூலம் பணம் பறித்த கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் செய்தனர்.

10 வருடங்கள் தீர்க்கப்படாத கணக்கு.. சூப்பர் ஸ்டார்களுடன் மோதுவது சவால் தான் - ஆஸி. வீரர்

இந்திய அணியிடன் 10 வருடங்களாக தீர்க்கப்படாத கணக்கு உள்ளதாக, சூப்பர் ஸ்டார்கள் நிறைந்த அணியுடன் மோதுவது சவாலன விஷயம்தான் என்றும் ஆஸ்திரேலியா அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.

இரவு 7 மணிக்குள் இங்கெல்லாம் மழை! கவனமா இருங்க!

தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 19) இரவு 7 மணிக்குள் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சுரேஷ் கோபி பீதியை கிளப்புகிறார்.. அரைவேக்காட்டுத்தனமாக பேசக் கூடாது - செல்வப்பெருந்தகை கண்டனம்

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறார் என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பை படிக்காமல் அரைவேக்காட்டுத்தனமாக கூறியிருக்கிறார் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

ஆற்காடு சுரேஷ் மனைவி கைது.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எகிரும் பரபரப்பு..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை செம்பியம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

முல்லை பெரியாறு அணை உடைந்தால் யார் பொறுப்பு?.. கேரளாவுக்கு சக்தி இல்லை.. சுரேஷ் கோபி ஆதங்கம்

முல்லை பெரியாறு அணை உடைந்தால் யார் பொறுப்பேற்பது என்றும் இன்னொரு பேரழிவை எதிர்கொள்ளும் சக்தி கேரளாவுக்கு இல்லை என்றும் நடிகரும், மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

'இரட்டை வேடம் போடும் மமதா பானர்ஜி'.. மருத்துவ மாணவியின் தந்தை பகீர் குற்றச்சாட்டு!

மருத்துவ மாணவி படுகொலையை கண்டித்து மமதா பானர்ஜி பெண்களுடன் இணைந்து பேரணி மேற்கொண்டார். ஆனால் மறுபக்கம் இந்த விவகாரத்தை கண்டித்து மேற்கு வங்கம் முழுவதும் நடந்து வரும் போராட்டத்தை போலீசார் ஒடுக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Vijay: ”விஜய் எப்பவுமே சூப்பர் ஸ்டார் தான்..” அடுத்த பஞ்சாயத்து ஆரம்பம்... கோட் பிரபலம் அதிரடி!

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சரத்குமார் பேசியது பெரும் சர்ச்சையானது. இந்த பஞ்சாயத்து ஓய்ந்துவிட்ட நிலையில், விஜய் தான் எப்பவுமே சூப்பர் ஸ்டார் என தற்போது சினேகா பேசி மீண்டும் ரசிகர்களுக்கு வைப் கொடுத்துள்ளார்.

'வரலாற்றில் அழிக்க முடியாத தலைவர்'.. கருணாநிதிக்கு புகழ்மாலை சூட்டிய ராஜ்நாத் சிங்!

சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்கள் தேசியக் கொடி ஏற்றும் உரிமையைப் பெற்று தந்தவர் கருணாநிதி தான். தமிழ்நாட்டில் முதல்முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றியவர் அவர் தான். வரலாற்றில் அழிக்க முடியாத பல்வேறு சாதனைகளை படைத்த கருணாநிதி, ஒரு மாநிலத்தின் தலைவராக இல்லாமல் தேசிய தலைவராக பார்க்கப்பட்டார்.

மம்முட்டிக்கு தேசிய விருது வழங்காதது ஏன்? - நடுவர் குழு பதிலால் மீண்டும் சர்ச்சை..

சிறந்த நடிகருக்கான விருதை மம்முட்டிக்கு வழங்காததற்கு காரணம் குறித்து கேரள நடுவர் குழுவில் ஒருவராக இடம்பெற்றுள்ள இயக்குநர் எம்.பி.பத்மகுமார் கூறியிருக்கும் பதில் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.