K U M U D A M   N E W S

20 வயதிலேயே இப்படி ஒரு சோகமா?.. பிரபல தயாரிப்பாளரின் மகள் புற்றுநோயால் மரணம்..

சிகிச்சைக்காக ஜெர்மனி அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார்.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... நீலகிரியில் தொடரும் கனமழை... அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

Tamil Nadu Weather Update : தமிழ்நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட அதன் சுற்றுப்புற பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதேநேரம் நீலகிரியில் பெய்து வரும் தொடர் கனமழையால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

‘இன்ஸ்டா’ பிரபலம் 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்து பலி - ரீல்ஸ் செய்ய முயன்றபோது சோகம்

Aanvi Kamdar Died : சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில், ஆன்வி கம்தாரை 2 லட்சத்து 56ஆயிரம் பேர் பின்தொடர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அம்பானி வீட்டுத் திருமணத்தில் குண்டு வெடித்தால்... போஸ்ட் போட்ட இளைஞர் கைது...

ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்செண்ட்டுக்கும் நடைபெற்ற திருமண விழாவில் உலகத் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

அரசியல் கொலை இல்லை; கொலை‌ மிரட்டல் குறித்து எந்த தகவலும் வரவில்லை - காவல் ஆணையர்

ஆம்ஸ்ட்ராங் கொலை அரசியல் தொடர்பான கொலை இல்லை என்றும் ஆம்ஸ்ட்ராங்கிற்கு கொலை‌ மிரட்டல் இருப்பதாக காவல் துறையினருக்கு எந்தவித தகவலும் வரவில்லை என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். மேலும், கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பதை கண்டுபிடித்து சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு... தமிழகத்தில் எங்கெல்லாம் மழை… மீனவர்களுக்கு என்ன எச்சரிக்கை..?

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நீலகிரியில் கனமழை நீடிக்கும்.. உஷார் மக்களே.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மேலும் 2 நாட்கள் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்று முதல் 1ஆம் தேதி வரை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

7 நாட்களுக்கு மழை இருக்கு.. ரெயின் கோட் இல்லாம வெளியே போகாதீங்க.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய 2 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.