மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News| 02-09-2024
செப்டம்பர் 2ம் தேதி மாவட்ட செய்திகள்
செப்டம்பர் 2ம் தேதி மாவட்ட செய்திகள்
சென்னையில் அடுத்தாண்டும் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுமா என்பது குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அப்டேட் கொடுத்துள்ளார்.
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விருது வழங்கும் நிகழ்ச்சியில் குப்பைகள் போல் கொட்டிக்கிடந்த விருதுகளை எடுத்துச்செல்லக் கூறியதால், அதிருப்தி அடைந்த விருது பெற்றவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றதும், செலுத்திய பணத்தை திரும்ப கேட்டதும் சலசலப்பை ஏற்படுத்தியது.
Today Headlines : செப்டம்பர் 2ம் தேதி காலை 6 மணி தலைப்புச் செய்திகளை இங்கே பார்க்கலாம்
காங்கிரஸ் கட்சியினரை விமர்சித்த திமுக நிர்வாகியை கண்டித்த ஆர்.எஸ்.பாரதி, செய்திகளில் இடம் பிடிப்பதற்காக பேச வேண்டாம் என்று மேடையிலேயே கண்டித்ததால் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயம் கோலாகலமாக நிறைவுபெற்றது. இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Radhika Sarathkumar on Hema Committe Report: மலையாள திரை உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் ஹேமா கமிட்டி ரிப்போர்ட் குறித்தும், விஜய்யின் அரசியல் வருகை குறித்து பாஜக உறுப்பினரும் நடிகையுமான ராதிகா சரத்குமார் பேட்டி
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தங்கள் குழந்தைகளுடன் திரண்டு வந்த பொதுமக்கள் அதிவேகத்தில் கார்கள் சீறிப்பாய்ந்து செல்வதை பிரமிப்புடன் கண்டு ரசித்தனர். கார் பந்தயத்தில் பங்கேற்ற சில வீரர்களின் கார்களின் பழுதடைந்து அவர்களுக்கு ஏமாற்றம் அளித்தன. மேலும் போட்டி விறுவிறுப்பாக நடந்தபோது நாய் ஒன்று குறுக்கே ஓடி வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
Formula 4 Race of 1 Round 2 Winner: சென்னையில் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயத்தின் முதல் ரேஸின் 2வது ரவுண்டை ஆஸ்திரேலிய வீரர் Hugh Barter வென்றார்.