K U M U D A M   N E W S

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 13-09-2024

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 13-09-2024

Coolie: ”ரஜினிக்காக மட்டும் தான் ஓக்கே சொன்னேன்..” லோகேஷுக்கு தக் லைஃப் கொடுத்த பிரபல ஹீரோ!

சூப்பர் ஸ்டார் ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் கூலி படத்தில், கன்னட நடிகர் உபேந்திராவும் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கமிட்டானது குறித்து உபேந்திரா மனம் திறந்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

திரைத்துறை குடும்பம் என்பதால் குறி வைக்கப்படுகிறோம்... பாடகர் மனோவின் மனைவி ஜமிலா கண்ணீர்

தவறு எங்கள் பக்கம் இல்லை திரைத்துறை குடும்பம் என்பதால் குறி வைக்கப்படுகிறோம் என பாடகர் மனோவின் மனைவி ஜமீலா கண்ணீர் மல்க தெரிவித்தார். 

மதிக்காத மருத்துவர்கள்... பதவி விலகத் தயார்.... குண்டைத் தூக்கிப் போட்ட மம்தா பானர்ஜி!

சாமானியர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக பதவி விலகவும் தயாராக இருக்கிறேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

SJ Suryah: “இதுக்காக தான் மேரேஜ் பண்ணல... அது என்னோட போகட்டும்..” மனம் திறந்த எஸ்ஜே சூர்யா!

இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் பேச்சுலராக வாழ்ந்து வருவது குறித்து எஸ்ஜே சூர்யா மனம் திறந்துள்ளார்.

திருமாவளவன் காலம் தாழ்த்தி விட்டார்.. என்னை ஜெயிக்க வையுங்கள்.. அணல் பறந்த சீமானின் பேச்சு!

நகர்ப்புற வளர்ச்சியில் கவனம் செலுத்தும் அரசுகள் கிராமப்புறங்களை கண்டு கொள்வதில்லை என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

கோயில் கோபுரம் முன்பு வணிக வளாகம்... அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கோபுரம் முன்பு வணிக வளாகம் கட்டும் திட்டத்தை ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ரெயின் கோட்-ஐ எடுத்துக்கோங்க... தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு என எச்சரிக்கை!

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாலியல் வழக்கு விசாரணை.. நீதிமன்றம் அதிருப்தி

கிருஷ்ணகிரி அருகே போலி என்சிசி முகாமில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையின் விசாரணை முறையாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.